April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று கொரோனா 4,506 ஆக குறைந்தது; 113 பேர் சாவு

1 min read

In Tamil Nadu today the corona has dropped to 4,506; 113 deaths

30.6.2021

தமிழகத்தில் 4,506 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 113 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 49 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 4,506 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,79,696 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 2,466பேர் ஆண்கள், 2,040 பேர் பெண்கள். இன்று 5,537பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,08,886ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 113 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,619 ஆக அதிகரித்து உள்ளது.

கோவை

கோவையில் இன்று 514 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 420 பேருக்கும், சென்னையில் 257 பேருக்கும், செங்கல்பட்டில் 207 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், திருப்பூரில் 270 பேருக்கும், திருச்சியில் 205 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று 15 பேரும், கோவையில் 12 பேரும் இறந்துள்ளனர்.

நெல்லை

நெல்லையில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்தில் இன்று இறப்பு இல்லை. தென்காசி மாவட்டத்தில் 28 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இறப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 75 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.