June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தப்பிஓடிய சேவக்கோழி/ நகைச்சுவை சிறுகதை/ தபசுகுமார்

1 min read

Escaped Sevakozhi / Comedy Short Story / Tapasukumar

12/7/2021

வீட்டில் வைத்திருந்த செம்பு தண்ணி கவிழ்ந்தால் கண்ணாயிரம் மனைவி கவலை அடைந்தார். பவுர்ணமி பூஜைக்கு கண்ணாயிரம் கண்டிப்பா செல்லவேண்டும் என்று அவரது மனைவி உத்தரவு போட்டார். இதனால் கண்ணாயிரம் யோசனையில் இருந்தார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த வாலிபர், கண்ணாயிரம் அண்ணே பவுர்ணமி பூஜைக்கு போறது சுற்றுலாதலத்துக்கு போறமாதிரி. பயப்படாதீங்க. என்றான். கண்ணாயிரம் உடனே தம்பி, பவுர்ணமி பூஜைக்கு என்னுடன் ஒருத்தர் கலந்து கொள்ளலாம் என்று கோடாங்கி பெஷல் பெர்மிஷன் வழங்கியிருக்கிறார். நீ என்னுடன் வந்துரு என்றார். உடனே அந்த வாலிபர் ம்….ஹும் நான் வரலை. இரவு பனிபெய்யும். என் உடம்புக்கு ஆகாது என்று மறுத்தான்.
அவனை கண்ணாயிரம் விடவில்லை. தம்பி, என்னிடம் இரண்டு கறுப்பு கம்பிளி இருக்கு. அதில் ஒண்ணு உனக்கு தர்றேன். மூடிக்கிட்டு போய் வருவோம் என்றார் கண்ணாயிரம்.
ஆனால் வாலிபர் எங்க அம்மா திட்டும், நான் வரலை என்றான்.
கண்ணாயிரம் உன் அம்மாவிடம் நான் சொல்லுறேன். பயப்படாம வா என்று வற்புறுத்தினார். அவன் அம்மா திட்டும் என்று மீண்டும் சொன்னான்.
அந்த நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்த கண்ணாயிரம் மனைவி, ஏங்க அந்த தம்பிகூட சண்டை போடுறீங்க என்றுகேட்டார்.
கண்ணாயிரம் மோகினியை விரட்டும் பவுர்ணமி பூஜைக்கு வரச்சொன்னேன். வரமாட்டேங்கிறான் என்றார். நீ போயிட்டு வாடா.. என்றார் கண்ணாயிரம் மனைவி.
அதற்கு அந்த வாலிபர், அக்கா பவுர்ணமி பூஜைக்கு உரிய பொருட்கள் வாங்கிட்டீங்களா என்று கேட்க வந்தேன். வாங்கிட்டீங்களா. எனக்கு தெரிஞ்ச கடை இருக்கு. வாங்கி தரட்டுமாஎன்று கேட்டான்.

நாங்க வாங்கல. நீ வாங்கிட்டு வா. இரவு பவுர்ணமி பூஜைக்கு வரும்போது காசு வாங்கிக்க என்றார்.
வாலிபர் யோசித்தான். கமிஷன்கிடைக்கும். அதை ஏன் விடுவானே. சரி அக்கா. முன்னுரு ரூபா ஆகும். நான் வாங்கிட்டுவந்துடுறன். காசை பிறகுவாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைக்குவிரைந்தான்.

சேவக்கோழி, பொங்கல் பானை, பச்சரிசி, வெல்லம், மல்லிகை பூ, தேங்காய், பழம், சூடம், சாம்பிராணி, வாழை இலை, மோகினிக்கு சேலை, சட்டை, ஆகியவைகளை வாங்கி வந்தான். அக்கா இப்போ எல்லாவிலையும் கூடிப் போச்சு. அறுநூறு ரூபா ஆயிட்டது என்றான்.
டேய் உனக்கு கமிஷன் கிடைக்குமல்லா…என்றார்.
ஏதோ கொஞ்சம் கிடைக்கும். முன்னே மாதிரி இல்லை. என்று அலுத்துக் கொண்டான்.
சரிடா,எங்க வீட்டுக்காரர் அதிகமாக பயப்படுவாரு. பவுர்ணமி பூஜைக்கு அவரை பத்திரமா கூட்டிட்டு போய் பத்திரமா கொண்டு விட்டுடுடா என்றார் கண்ணாயிரம் மனைவி.
சரி அக்கா என்று சொல்லிவிட்டு வாலிபர் வீட்டுக்கு போனார். கண்ணாயிரம் மனைவி பூஜை பொருட்கள் வாங்கி பத்திரமாக வீட்டுக்குள் வைத்தார். சேவக்கோழி காலில் கட்டுப் போடப்பட்டிருந்தது. கண்ணாயிரம் அதை பரிதாபமாக பார்த்தார் அதை தடவி கொடுத்தார். அது அங்கும் இங்கும் துள்ளியது. கண்ணாயிரம் மனைவி ஏங்க அதை சும்மா இருங்க தப்பி ஓடிட போகுது என்று எச்சரித்தார். கண்ணாயிரம் மற்ற பொருட்களை பார்த்தார். மோகினிக்கு வாங்கிய சேலை சட்டை சிவப்பாக இருந்தது. கண்ணாயிரத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. மோகினிக்கு பிடித்த டிரஸ் வெள்ளைதானே. சினிமாவில் கூட வெள்ளை டிரசில்தானே மோகினி வருது. பிறகு சிவப்பு சேலை, சட்டை எப்படி ஏற்றுக்கிடும்.
கோபத்தில் மோகினி என்ன அடிச்சா என்ன பண்ணுறது என்று புலம்பினார். அவர் மனைவி சும்மா சந்தேகத்தை கிளப்பாதீங்க. அமைதியாக இருங்க. கோடாங்கி வந்தவுடன் கேட்டுக்கொள்வோம். அது வரை அமைதியாக இருங்க என்றார்.
அந்த நேரத்தில் வெளியிலிருந்து சிவப்பு நிறத்தில் ஒரு சேவக்கோழி உள்ளே ஓடி வந்தது. அது கட்டிப்போட்டிருந்த வெள்ளை சேவலை கொத்தியது. கண்ணாயிரம் அதை விரட்டினார். அது போகவில்லை. கீழே கிடந்த சேவலை சுற்றி சுற்றி கொத்தியது. வலி தாங்காமல் வெள்ளைசேவல் கால்களை அங்கும் இங்கும் இசைத்தமிழ் கால் கட்டு அவிழ்ந்தது. உடனே வெள்ளை சேரலாம் சிவப்பு சேரலாம் அங்கிருந்து தப்பி ஓடின.இதை பார்த்த கண்ணாயிரம் மனைவி. கோபம் மரங்களை நட்டவேண்டும் என்பதைஉணர்த்துகிறது அடைந்து கத்தினார். ஓடுங்க, ஓடுங்க சேவக்கோழி யை புடிச்சிட்டு வாங்க என்றுவிரட்டினார்…

வே. தபசுக்குமார். புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.