May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,947 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு

1 min read

Corona for 1,947 people in Tamil Nadu today; 27 deaths

30.7.2021
தமிழகத்தில் இன்று 1,947 பேர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக சிறிதுசிறதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் சற்று கூடி வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:
தமிழகத்தில் இன்று 1,947 பேருக்கு கொரோனா உறுதியானது. (நேற்றைய பாதிப்பு 1859 பேரும், நேற்று முன்தினம் பாதிப்பு 1767 பேரும் என பாதிப்பு இருந்தது.) இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,57,611 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,109 பேர் ஆண்கள், 838 பேர் பெண்கள்.

இன்று 2,193 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,02,627 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 27 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,050 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

கோவையில் இன்று 230 பேருக்கும், சென்னயைில் 215 பேருக்கும், ஈரோட்டில் 171 பேருக்கும், செங்கல்பட்டில் 109 பேருக்கும், தஞ்சாவூரில் 105 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 19 பேருக்கும், தென்காசியில் 18 பேருக்கும், தூத்துக்குடியில் 20 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசியில் இன்று உயிரிழப்பு இல்லை. தூத்துக்குடியில் இன்று ஒருவர் இறந்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.