May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

17வயது சிறுவனை திருமணம் செய்த பெண் போக்சோ சட்டத்தி்ல் கைது

1 min read

Woman arrested for marrying 17-year-old boy

29.8.2021
17வயது சிறுவனை கடத்தி திருமணம் செய்த பெண் போக்சோ சட்டத்தி்ல் கைது செய்யப்பட்டார்.

விபரீத காதல்

கோவை, பொள்ளாச்சி நகர்ப்புற பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் 19 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார், அந்த பெட்ரோல் பங்கிற்கு 17 வயது சிறுவன் ஒருவன் சென்று இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் பிடிக்கும் பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுவனின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததால் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணம்

இரு தினங்கள் முன்பு சிறுவனுக்கு ஹிரன்யா ஆபரேஷன் செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்ற பெண் சிறுவனிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி பொள்ளாச்சி அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச்சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்பு வீட்டிற்கு வந்த சிறுவனிடம் பெற்றோர் விசாரித்த பொழுது அந்த பெண்ணும் தானும் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததனர்.

கைது

புகாரின் பேரில் அந்த பெண்ணிடம் விசாரித்ததில் சிறுவனை கட்டாயத் திருமணம் செய்தது தெரியவந்தது. உடனே, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் செல்வி.தமிழ்மணி அறிவுறுத்தல் படி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி அந்த பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் முதல்முறையாக பெண்மீது போக்சோ சட்டம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் முதல் முறையாக பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது இப்போதுதான் முதல் முறை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.