April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,512 பேருக்கு கொரோனா 22 பேர் சாவு

1 min read

In Tamil Nadu 1512 person affected by Conona today and death 22

31.8.2021
தமிழகத்தில் இன்று 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 22 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. நேற்றைய பாதிப்பு 1,523 ஆக இருந்து நிலையில் இன்று 1,512 குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,51,012 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1,512 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,14,872 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 874 பேர் ஆண்கள், 638 பேர் பெண்கள்.‘
இன்று 1,725 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,63,101 ஆக உயர்ந்துள்ளது.

22 பேர் சாவு

இன்று 22 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,921 ஆக அதிகரித்து உள்ளது.

கோவை, தஞ்சை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், சென்னை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நீலகிரி, சேலம், திருவாரூர், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இன்று இறந்துள்ளனர்.
சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக இருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 189 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் இன்று 173 பேருக்கும், ஈரோட்டில் 141 பேருக்கும், தஞ்சாவூரில் 98 பேருக்கும் செங்கல்பட்டில் 95 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 12 பேருக்கும், தென்காசியில் 14 பேருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.