புதுச்சேரியில் மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடன் தள்ளுபடி
1 min readAll education loan waivers received by students in Pondicherry
1.9.2021
புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில், மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
கடன் தள்ளுபடி
புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில், மாணவர்கள் பெற்ற அனைத்து கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.
சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் உதவித்தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
பணிநிரந்தரம்
புதுச்சேரி சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
தியாகிகளுக்கான பென்ஷன் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.