இந்தியாவில் மேலும் 24,354 பேருக்கு கொரோனா; 234 பேர் சாவு
1 min readCorona for another 24,354 in India; 234 deaths
2.10.2021
இந்தியாவில் ஒருநாளில் மேலும் 24,354 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 234 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 2,73,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, கடந்த 197 நாட்களுக்கு பிறகு குறைவாக பதிவாகி உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 0.81 சதவீதமாக உள்ளது. இது மார்ச் 2020க்கு பிறகு, தற்போது தான் இந்த அளவுக்கு குறைந்துள்ளது.
நேற்று 24,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,37,91,061 ஆக உயர்ந்து்ளளது.
234 பேர் சாவு
இந்தியால் ஒரே நாளில் 234 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,48,573 ஆக உள்ளது. .
கொரோனாவில் இருந்து 3,30,68,599 பேர் குணம் அடைந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் விகிதம் 97.86 சதவீதமாக உள்ளது.
2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவ துவங்கிய பிறகு, குணமடைந்தவர்களின் விகிதம் தற்போது தான் அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.
நேற்று ஒரே நாளில் 14,29,258 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 57,19,94,990ஆக உள்ளது. .
கேரளா
நேற்றுகேரளாவில் மட்டும் 13,834 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த மாநிலத்தில் 95 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல், நேற்று மட்டும் 62,86,379 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 89,67,51,334 ஆக அதிகரித்தது.