May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 14,313 பேருக்கு கொரோனா; 549 பேர சாவு

1 min read

Corona for 14,313 people in a single day in India; 549 deaths

30.10.2021

இந்தியாவில் ஒரே நாளில் 14,313 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. 549 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்குள் வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகம் கண்டது. இந்த நிலையில் இன்று 14 ஆயிரத்துக்குள் வந்திருக்கிறது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 14 ஆயிரத்து 313 பேர் மட்டுமே பெருந்தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரே நாளில் 13,543 பேர் கொரோனாவால் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,27,632 லிருந்து 3,36,41,175 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.19 சதவீதம் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது.

549 பேர் சாவு

நாடு முழுவதும் கொரோனாவுக்கு ஒரு நாளில் 549 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,57,191 லிருந்து 4,57,740 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,61,555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 105.43 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 56,91,175 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,74,32,030 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.