June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பாத்ரூமில் தவித்தகண்ணாயிரம்/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram Lingered in the bathroom / Story by Thabasukumar

16.12.2021
கண்ணாயிரம் பிளட் டெஸ்ட்டுக்கு ரத்தம் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்ததும் கைவலிக்கு கால்வலிக்கு என்று சத்தம் போட்டார். அவர் மனைவி, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து விட்டு, நாளைக்கு யூரின் டெஸ்ட்டு, மோசன்டெஸ்ட்டு எடுக்கணும் என்றார். மீண்டும் டெஸ்ட்டா என்று கண்ணாயிரம் வாயைபிளந்த வேளையில் பூங்கொடி, ம்.. வாயைபிளக்காதீங்க.. இந்த டெஸ்டுக்கு ஊசி எல்லாம்போடமாட்டாங்க.. காலையிலே இரண்டையும் எடுத்து தந்திருங்க,கொண்டுபோய்ஆஸ்பத்திரியிலே காட்டி டெஸ்டு பண்ணுவோம் என்றார்.
கண்ணாயிரம்… ம்.. முகத்தை சுளித்தபடி.. பார்ப்போம்.. என்று சொன்னார்.
சிறிதுநேரம்கழித்து, பால்சோறுசாப்பிட்டவர்.. காலையில் உள்ள டெஸ்ட்டை நினைத்து.. சிந்தனையில் இருந்தார். ம்.. என்ன யோசனை.. படுங்க..என்றார் பூங்கொடி. கண்ணாயிரம்.. கொட்டாவி விட்டபடி. பிளட்டெஸ்ட்டு மட்டும் பத்தாதா.. மற்ற டெஸ்டும் வேணுமா.. என்று கேட்டார். பூங்கொடி.. என்ன சொல்லுறீங்க. எல்லாடெஸ்டும் எடுக்கணும். அப்பதான் என்னவியாதின்னு கண்டுபிடிக்கமுடியும். பேசாம படுங்க..காலையிலே பார்ப்போம். என்று அதட்டினார்.
கண்ணாயிரம்..உடனே டெஸ்டுக்கு பயந்தே படிப்பை பாதியிலே நிறுத்திட்டேன். ஆனாலும். டெஸ்டு தொடருது.என்றார்.
பூங்கொடி சிரித்தார்.
கண்ணாயிரம். மெல்ல கண்களை உருட்டியபடி அப்பாவியாக பார்த்தார். கட்டிலில் சோர்ந்து படுத்துகொண்டார். பூங்கொடியும் பாயை விரித்துபடுத்தார். விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
லைட்டைஅணைக்கவா என்று பூங்கொடி கேட்க. கண்ணாயிரம்.. ம். கொஞ்ச நேரம் கழித்து நான் தூங்கினபிறகு லைட்டைஅணைச்சிடு.. என்று சொன்னார்.
கண்ணாயிரத்தின் குறட்டை சத்தம் கேட்டதும் பூங்கொடி விளக்கை அணைத்தார். தூங்கினார். அதிகாலை வேளை.. அலாரம் அடித்தது. பூங்கொடி எழும்பினார். கண்ணாயிரத்தை கையால் அடித்து எழும்புங்க..விடிஞ்சுட்டு என்றார். கண்ணாயிரம் கண்களை மெல்ல திறந்து பார்த்துவிட்டு.. இன்னும் கொஞ்சம் தூங்கிக்கிறேன்.. தொந்தரவுபண்ணாதே என்று மீண்டும் சுருண்டுபடுத்தார்.
பூங்கொடி அவரிடம்.. என்ன தூக்கம்.. சீக்கிரம் எழும்புங்க..பாத்துரூமில ஒருசின்ன பாட்டிலும் சின்ன டப்பாவும் வைக்கிறேன். அதிலே எடுத்துவையுங்க.. டெஸ்டுக்குகொண்டு போகணும் என்றார். கண்ணாயிரம். சரி, என்று சொல்லிவிட்டு தூங்கினார்.
பூங்கொடி காலைசமையலில் மும்முரமானார். சிறிது நேரம்கழித்து எழுந்த கண்ணாயிரம். அவசரமா வருதே என்று வேகமாக பாத்ரூமுக்குள் ஓடினார். காலை கடன்களை முடித்துவிட்டு அப்பாட.. இப்பதான். நல்லா இருக்கு என்று கூறியபடி பாத்ரூமைவிட்டு வெளியேவந்தார். அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி.. என்ன காபி ரெடியா என்று கேட்டார்.
பூங்கொடி.. என்ன காபியா.. இருங்க.பாத்ரூமில சின்னபாட்டிலும், டப்பாவும்வைச்சிருந்தேனே.. அதிலேஎடுத்து வைச்சிங்களா என்று கேட்டார்.
கண்ணாயிரம்.. அய்யோ.. மறந்துட்டேன்.. அவசரமாபோனதால. கவனிக்கல. சாப்பிட்டுட்டு அப்புறம் போறேன்.. அப்போ எடுத்துவைக்கிறேன். என்றார்.
பூங்கொடி கோபமாக.. ஏங்க. காலையிலே.. வெறும் வயிற்றில் தான் எடுத்து அதைவைக்கணும். மீண்டும் பாத்ரூமுக்கு போங்க. என்று விரட்டினார்.
கண்ணாயிரம் மெல்ல, பூங்கொடி இப்பதான் போனேன். உடனேவராது. என்றார்.
பூங்கொடி உடனே, எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க மீண்டும் பாத்ரூமுக்குபோயிட்டுவாங்க. அப்பதான். காபி, சாப்பாடு எல்லாம் என்று சொன்னார்.
கண்ணாயிரம் மெல்ல, இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும். அப்போ. முயற்சிபண்ணுறன்.. என்றபடி யோசனையில் ஆழ்ந்ததார்.
சமையல் அறையில் இட்லி, சட்ணி ரெடியாகியது. கண்ணாயிரத்துக்கு வயிற்றை கிள்ளியது. ஆனால்கிடைக்காதே என்று நினைத்தவர்.. சுற்றும்முற்றும்பார்த்தார். பாத்ரூமுக்கு போகலாமா வேண்டாமா இல்லை ஒருமணி நேரம் காத்திருப்போமா என்றபடி பலமாக சிந்தித்தார்.
பூங்கொடி என்னங்க.. பாத்ரூம்போகலய்யா.. கொஞ்சமா இருந்தாலும் போதுங்க..போங்க என்றார். ஆமா.. முயன்றால் முடியாதது ஒண்ணுமில்ல… என்று சொல்லியவாறு கண்ணாயிரம் பாத்ரூமுக்குள்சென்றார். வரும் ஆனா வராது என்பது போல இருந்தது. முயன்றார். முயற்சி வீண்போகவில்லை. டப்பாவை மூடி ஓரத்தில் வைத்தவர் பாட்டில் நிரம்பி இருக்கா என்று கையில் தூக்கிபார்த்தார். போதாத நேரம்.. கையிலிருந்த பாட்டில் நழுவி கீழேவிழுந்து உடைந்தது. அந்த சத்தம் கேட்டு பூங்கொடி.. என்ன சத்தம்.. என்று கேட்டார். ஒண்ணும் இல்ல.. ஒண்ணும் இல்ல.. என்று சமாளித்தார் கண்ணாயிரம்.
ஏதோபாட்டில் விழுகிற சத்தம் மாதிரி கேட்டது. பொய்சொல்லாதீங்க.. என்று பூங்கொடி. சத்தம் போட்டார். கண்ணாயிரம் மெல்ல. பொய்சொல்லல..நீ ரொம்ப மோசம்.. பிளாஸ்டிக் பாட்டில் தந்திருக்கலாமுல்ல.. கண்ணாடிபாட்டில் ஏன் தந்த..என்றார்.
பூங்கொடி..என்னங்க சொல்லுறீங்க எதையோ மறைக்கிறீங்க நான் உள்ளே வர்ரேன்என்றபடி பாத்ரூமைநோக்கிவந்தார். அதைபார்த்த கண்ணாயிரம். உள்ளேவராதே.. என்றார். பூங்கொடி உடனே நான் எதுக்குவரக்கூடாது சொல்லுங்க என்றுகேட்டார்.
பாட்டில் உடைஞ்சுட்டுன்னுசொன்னா சத்தம்போடுவா என்று நினைத்தவர்.. ஒண்ணும் இல்ல.. வேற ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கொடு என்றார். பூங்கொடி கோபத்தில் எல்லாத்தையும் வேஷ்ட்டு பண்ணக்கூடாது. கண்ணாடிபாட்டலிலேபிடிங்க. என்றார்.
அது முடியாது சிறுசாஇருக்கு.. என்றார் கண்ணாயிரம். என்ன மாத்தி மாத்தி சொல்லுறீங்க.. கதவைதிறங்க..என்றார் பூங்கொடி.
கண்ணாயிரம்.. நீ இங்கேவரக்கூடாது.. நான் எல்லாத்தையும் சரி பண்ணிக்கிடுறேன். அப்புறம்வா..என்றுசொன்னார்.
பூங்கொடி உடனே என்னத்த சரிபண்ணுறீங்க.. நான் பாத்ரூம்போகணும். கதவைதிறங்க என்றார். கண்ணாயிரம் இன்னொரு பாத்ரூம் இருக்கில்லா. அங்கே போ… என்றார்.
பூங்கொடி.. என்னங்க அதுவீட்டுக்குவெளியேபோகணும். அது முடியாது. கதவை திறங்க அவசரம் என்றார். கண்ணாயிரம் உடைந்த பாட்டில் சிதறல்களை ஒரு ஓரத்தில் துணியால் ஒதுக்கினார். பின்னர் மெல்ல கதவை திறந்தார். பூங்கொடி வேகமாக உள்ளே வந்தார். உடைந்துகிடந்த ஒருபீங்கான் பூங்கொடி காலில்குத்தியது.

  • வே. தபசுக்குமார். புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.