June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆட்டோக்காரரிடம் சண்டைபோட்ட கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram fighting with the auto driver / Story by Thabasukumar

22.12.2021
கண்ணாயிரம் யூரின் டெஸ்டுக்குபயன்படுத்திய பாட்டிலை பாத்ரூமில் கைநழுவவிட்டதால் அந்த பாட்டில் கீழேவிழுந்து உடைந்தது. சத்தம் கேட்டு பூங்கொடி ஓடிவந்து கதவை திறக்கும்படி சொன்ன போது கண்ணாயிரம் ஒன்றும் இல்லை என்று சமாளித்துக்கொண்டு உடைந்த பீங்கான் களை ஒருதுணியால் ஒதுக்கிவிட்டு கதவைதிறந்தார். ஆனால் ஒதுக்கப்படாத ஒருசின்ன பீங்கான் சிதறல் பூங்கொடி காலில்குத்த அவர் அய்யோ காலில் பீங்கான் குத்திட்டு என்று அழுதபடி பாத்ரூமில் இருந்து வெளியேவந்தார்.

கண்ணாயிரம் உடனே நான்தான் சொன்னேனே..நீ உள்ள வராதே என்று எத்தனைமுறை சொன்னேன். நீ கேட்கல..இப்பம் அது குத்திட்டு, இதுகுத்திட்டு அப்படின்னு சொல்லுற.. என்று சத்தம் போட்டார். பூங்கொடி கோபத்தில். உள்ளே பூங்கான் கிடக்கு வராதேன்னு சொல்லலாமுல்ல.
பாட்டிலை ஏன்உடைச்சிங்க.. என்று பதிலுக்கு சத்தம் போட்டார். உடனே கண்ணாயிரம் பாட்டல்ன்னா.. உடையத்தான் செய்யும்.. அதான். பிளாஸ்டிக்பாட்டில் கேட்டேன். நீதான் தரல…என்று குற்றம்சாட்டினார்.
அதை கேட்ட பூங்கொடி.. சரி பிளாஸ்டிக்பாட்டில் தர்றேன்.. அதிலே பிடிச்சுட்டுவாங்க.. என்று ஒருசின்ன பிளாஸ்டிக்பாட்டில் எடுத்து கொடுத்தார். கண்ணாயிரம் ஒரு அரைமணிநேரம் ஆகும்.. என்று சொல்லிய படி வெளியேவரமுயல.. பூங்கொடி ஆ.. வெளியேவராதீங்க.. என்று கதவை இழுத்துவெளியே பூட்டினார். கண்ணாயிரம்…. ஏய்.. ஏய்… வெளியேபூட்டாதே. வெளியே பூட்டாதே என்றுகத்தினார். பூங்கொடி கேட்கவில்லை. பிளாஸ்டிக்பாட்டில் நிரப்பிவிட்டு கூப்பிடுங்க.. கதவைதிறக்கிறேன் என்றார்.
கண்ணாயிரத்துக்கு கோபம் கோபமாக வந்தது. தண்ணீரை நிரப்பி கொடுத்துடலாமா என்று நினைத்தார். நிறத்தைபார்த்து பூங்கொடி கண்டுபிடித்துவிடுவா.பிரச்சினை பெரிதாகிடும்.. கொஞ்ச நேரம் பாத்ரூமில் காத்திருப்போம் என்று முடிவுசெய்தார்.
பூங்கொடி. காலில் பீங்கான் குத்தி ரத்தம்வந்தபகுதியை துணியால் துடைத்தார்.பின்னர்காலில் துணியால் கட்டினார். லேசா வலிக்கு.. ஆஸ்பத்திரியில்… பேண்டேஜ் போட்டுக்கவேண்டியதுதான் என்றுநினைத்தார். ரப்பர் செருப்பை காலில்மாட்டிக்கொண்டு நடமாடினார். கண்ணாயிரம். பாத்ரூமில்.. முணங்கியபடி ம்.. என்ன செய்யலாம் என்று தலையை சொரிந்தார். நிமிடங்கள்கடந்தது. மீண்டும் முயற்சி.. சின்னபிளாஸ்டிக் பாட்டிலில்கால்வாசி நிரம்பியது. போதும்…போதும்..அவ்ளவுதான் முடியும். என்று நினைத்த கண்ணாயிரம் உடனே.. பூங்கொடி, பூங்கொடி, கதவைதிற. என்று சத்தம் போட்டார்.
பூங்கொடி.. என்ன முடிஞ்சுதா..கதவைதிறக்கிறேன் என்றபடி மெல்ல, மெல்ல நடந்து வந்து கதவைதிறந்தார்.
கண்ணாயிரம்…அப்பாட..என்ன கஷ்டம், என்ன கஷ்டம் என்றவாறு.. பூங்கொடி யிடம் பிளாஸ்டிக்பாட்டிலை கொடுத்தார். பூங்கொடி இது இங்கிருக்கு இன்னொண்ணு எங்கே என்று கேட்டார். அதான் இது என்று கண்ணாயிரம் சொன்னார். பூங்கொடி கோபத்தில் யூரின்டெஸ்டுக்குரியது இங்கே இருக்கு, மோசன்டெஸ்ட் டுக்குரியது எங்கே என்றார். கண்ணாயிரம் அதா.. டப்பா.. உள்ளே இருக்கு.. மறந்துட்டேன். இதோ எடுத்துட்டு வர்றேன் என்றபடி பாத்ரூமுக்குள் சென்று அந்த டப்பாவை எடுத்து பூங்கொடி யிடம் கொடுத்தார்.
இரண்டையும் பிளாஸ்டிக்பையில் பத்திரமாக வைத்த பூங்கொடி..
ஏங்க. அந்த பீங்கானை பத்திரமா.. அள்ளி வெளியே போட்டுட்டு குளிச்சிட்டுவாங்க..சாப்பிட்டுட்டு..ஆஸ்பத்திரிக்கு போவோம்.. என்றார்.
கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சிதாங்கவில்லை. பாத்ரூமில் உடைந்துகிடந்த பீங்கான் துகள்களை ஒரு பேப்பரில் அள்ளி வெளியே கொண்டுபோய்போட்டுவிட்டு வந்தார். பாத்ரூமில் உற்சாகமாக.. ஒருபாடலை பாடியவாறு குளித்துவிட்டு துண்டால் தலையைதுவட்டியபடி வெளியேவந்தார். பூங்கொடி அவருக்கு சூடாக சட்னியுடன் இட்லி கொடுத்தார். சாம்பார் எங்கே என்று கண்ணாயிரம் கேட்டார்.
சாம்பாரா..என்றபடி.பூங்கொடி சட்டியில் இருந்த சாம்பாரை ஊற்றினார். இரண்டையும் சேர்த்து சாப்பிட்ட கண்ணாயிரம் ஆ.. என்ன ருசி.. என்ன ருசி.. என்றார்.
சீக்கிரம்.. சாப்பிடுங்க. ஆஸ்பத்திரிக்கு போகணும்.. என்று பூங்கொடி அவசரப்படுத்தினார். கண்ணாயிரம்.. அவசரப்படுத்தாத..ரசித்து சாப்பிட்டுக்கிறேன்..
ஆமா..பூங்கொடி..இந்த இட்லிக்கு ருசி சேர்ப்பது சட்னியா, சாம்பாரா. என்று கேட்டார். பூங்கொடி கோபமாக.. ருசி சேர்ப்பது நான்தான். நான்சரியாவைக்கலன்னா.. எப்படி ருசியா இருக்கும். என்று கேட்டார். ஆமா.. உன் கைவண்ணமே. ருசி என்று கண்ணாயிரம் புகழ்ந்தார். பூங்கொடி மனசுக்குள்சிரித்துகொண்டார்.
சுகர் இருந்தா.. நாளைக்கு எல்லாமே கட்டு.. என்று. மெல்ல சொன்னார். கண்ணாயிரம் என்ன சொன்ன.. என்ன சொன்ன.. என்று கேட்டார். பூங்கொடி.. உடனே.. உங்களுக்கு காதும் கேட்கலையா..அதுவும் பஞ்சரா என்றார். கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது. எனக்கு காது நல்லா கேட்குமே..நீமெதுவா பேசினதுதான் கேட்கல என்று சொன்னார்.
சரி, சரி, நல்லா இருந்தா சரி, சாப்பிட்டுட்டு கிளம்புங்க.. என்றார் பூங்கொடி.
உடனே கண்ணாயிரம் நீசாப்பிடலய்யா.. என்று கேட்டார். பூங்கொடி.. நான் விரதம்.. காலையிலே இனி சாப்பிடமாட்டேன்.என்றார். ம்.. எதுக்கு விரதம்.. திடீரென்று.. புரியலையே.. என்றுகேட்டார் கண்ணாயிரம். அதுவா.. அதை சொல்லக்கூடாது.. அது ரகசியம் என்றார் பூங்கொடி. அப்படியா.. மவுனவிரதம் இருந்தாலாவது.. பிரச்சினைகுறையும். இப்படி சாப்பிடாமல் இருந்தா.. பிரச்சனைவரும்..என்ற கண்ணாயிரம் ஆஸ்பத்திரிக்கு செல்ல தயாரானார்.
யூரின் டெஸ்ட் டு, மோசன்டெஸ்ட்டுக்குரிய சமாச்சாரங்களை எடுத்து கொண்டு பூங்கொடியும் புறப்பட்டார். செல்போனில் அழைத்ததும் ஆட்டோ வந்தது.
ஆட்டோ காரரிடம் ஆஸ்பத்திரிக்கு போகணும் எவ்வளவு வேணும் என்றுகேட்டார் கண்ணாயிரம். அவர். ஆஸ்பத்திரிக்கா. போகமட்டுமா..நூற்றம்பது கொடுங்க என்றார். கண்ணாயிரம் கோபத்தில் நேற்றுதான் ஆஸ்பத்திரிக்கு போனோம் நூறுரூபாதான்கொடுத்தோம். இன்னைக்கு நூற்றம்பது ரூபாயா. அது எப்படி என்று கேட்டார். ஆட்டோக்காரர்.அதுவா..பெட்ரோல்விலையைநேற்று கூட்டிட்டாங்க. தெரியுமா.. அதான் கட்டணமும் கூடிட்டு என்றார். அதுக்காக நீங்கஅம்பது ரூபா கூட்டியிருதா.என்ன அநியாயம். நாங்க நடந்தே போயிடுவேன் என்றார் கண்ணாயிரம்.
அதை கேட்டதும் பூங்கொடி. ஏங்க. எனக்கு நடக்கமுடியாது. பீங்கான் குத்துவது வலிக்கு என்று கண்களை கசக்கினார். கண்ணாயிரத்துக்கு அதுமறந்து போச்சு. ஆமா. உன்னால நடக்கமுடியாதுல்ல.. ஆனாலும் நூற்றம்பது ரூபா கொடுக்க முடியாது. குறைச்சு சொல்லு என்று ஆட்டோகாரரிடம் கண்ணாயிரம் கேட்டார். அதற்கு அவர்.. மூணுபேர் இருக்கீங்க. நூற்று நாப்பது கொடுங்க என்றார். கண்ணாயிரம் திடுக்கிட்டார். என்ன நீ. நாங்க. இரண்டு பேர்தான் இருக்கோம்.மூணுபேர் அப்படின்னு சொல்லுற. உனக்கு கண்ணுதெரியலையா என்று கேட்டார். ஆட்டோக்காரர் மெல்ல நல்லா கண்ணு தெரியுது. அதான் சொல்லுறேன் என்றார். கண்ணாயிரத்துக்கும் சந்தேகம்வந்துவிட்டது. கூட யாரும்இருக்காங்களா என்று சுற்றிபார்த்தார். யாரும் இல்லை. பிறகு ஏன் மூணுபேர் என்கிறான் என்று யோசித்தார். பூங்கொடியை பார்த்தார். ஆட்டோக்காரரைபார்த்தார். பூங்கொடி குண்டா இருப்பது புரிந்தது. அதான் மூணு பேர்என்கிறார் ஆட்டோக்காரர் என்று தெரிந்தது. கண்ணாயிரத்துக்கு ஆத்திரம் வந்தது.
இந்த ஆட்டோவேண்டாம்.. நாங்க வேறு ஆட்டோ பார்த்துகொள்கிறோம் என்று அனுப்பிவைத்தார். ரோட்டுக்கு போவோம். வேறு ஆட்டோவரும். போகலாம் என்றார் கண்ணாயிரம்

வே.தவசுகுமார், புதுச்சேரி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.