June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

சிறிய விஷயங்களுக்கு மதிப்பளித்து ஏழைகளுக்கு உதவுங்கள்; போப் ஆண்டவர் வேண்டுகோள்

1 min read

Respect small things and help the poor; The Pope’s request to the Lord

25/12/2021

சிறிய விஷயங்களுக்கு மதிப்பளித்து ஏழைகளுக்கு உதவுங்கள் என்று போப் ஆண்டவர் வேண்டுகோள் உள்ளார்.

கிறிஸ்துமஸ்

உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது.

கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சேவை செய்யுங்கள்

வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் முந்தைய நாள் பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவதிலோ அல்லது வெற்றியைத் தேடி அலைவதிலோ வாழ்நாளை செலவிடாமல், இல்லாதவர்களுக்கு சேவை செய்வதில் செலவிடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் ‘வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களை’ மதிக்குமாறு கிறிஸ்தவர்களை போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

மேலும், கடவுள் தன்னை உயர்த்திக்கொள்வதில்லை, தன்னை தாழ்த்திக் கொள்கிறார்.’நம்மை நெருங்கி வரவும், நம் இதயங்களைத் தொடவும், நம்மைக் காப்பாற்றவும், உண்மையில் முக்கியமானவற்றிற்கு நம்மைத் திரும்பக் கொண்டுவரவும் அவர் தேர்ந்தெடுத்த பாதை, தன்னை தாழ்த்தி கொள்ளுதல் ஆகும்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படாததால் பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அனைவரும் உறுதி ஏற்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த பிரார்த்தனை கூட்டத்தில் 2,000 பொதுமக்களும், 200 மத பிரமுகர்களும் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *