தமிழகத்தில் இன்று 12,895 பேருக்கு கொரோனா; 12 பேர் சாவு
1 min readCorona for 12,895 people in Tamil Nadu today; 12 dead
9/1/2022
தமிழகத்தில் இன்று 12,895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். 1,808 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 12,895 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,48,308 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 12,843 பேர், வங்கதேசம் 23, ஐக்கிய அரபு எமிரேட் 8, இலங்கை 1, ஓமன் 1, இங்கிலாந்து 1, மேற்குவங்கம் 6, ஜார்கண்ட் 5, கேரளா 3, ஆந்திரா 2, டில்லியில் இருந்து வந்த ஒருவரையும் சேர்த்து மொத்தம் 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,00,286 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 7,558 பேர் ஆண்கள், 5,337 பேர் பெண்கள்.
தமிழகத்தில் 1,808 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,12,096 ஆக உயர்ந்துள்ளது.
12 பேர் கைது
தமிழகத்தில் 12 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,855 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,098 ஆக இருந்த நிலையில் இன்று (ஜன.9 ம் தேதி) 6,186 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 1512 பேருக்கும், திருவள்ளூரில் 702 பேருக்கும், கோவையில் 608 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 343 பேருக்கும், மதுரையில் 348 பேருக்கும், ராணிபேட்டையில் 184 பேருக்கும், ஈரோடடில் 149 பேருக்கும், கன்னியாகுமரியல் 184 பேருக்கும், திருநெல்வேலியில் 170 பேருக்கும், தென்காசியில் 38 பேருக்கும், தூத்துக்குடியில் 122 பேருக்கும், விருதுநகரில் 168 பேருக்கும், வேலூரில் 298 பேருக்கும், திருச்சியில் 275 பேருக்கும், திருப்பூரில் 219 பேருக்கும், சேலத்தில் 146 பேருக்கும், தஞ்சையில் 118 பேருக்கும் இனறு கொரோனா உறுதி செயப்பட்டு உள்ளது.