இந்தியாவில் புதிதாக 2, 55,874 பேருக்கு கொரோனா; 614 பேர் சாவு
1 min readCorona for 2,55,874 newcomers in India; 614 deaths
25/1/2022
இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் புதிதாக 2, 55,874 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 614 பேர் இறந்தனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த திங்கட்கிழமை 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 மற்றும் ஞாயிற்றுக்கிழமை பாதிப்பான 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 மற்றும் சனிக்கிழமை பாதிப்பான 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 – ஐ விட குறைவாகும்.
கடந்த 21-ம் தேதி அதிகபட்சமாக 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 97 லட்சத்து 99 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 67 ஆயிரத்து 753 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சத்து 71 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 36 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
614 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 614 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 462 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 162 கோடியே 92 லட்சத்து 9 ஆயிரத்து 308 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.