இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,35,532 ஆக குறைவு
1 min readDaily corona exposure in India is reduced to 2,35,532
29.1.2022
இந்தியாவில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது. இதனால் இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா 3-வது அலை
இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை பாதிப்பு சற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த வாரங்களில் கிடு கிடுவென உயர்ந்த தினசரி பாதிப்பு கடந்த சில தினங்களாக இறங்கு முகம் கண்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கையில் ஏறத்தாழ 35 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இந்த நிலையில், 2-வது நாளாக கொரோனா பாதிப்பு இன்றும் சற்று குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
871 பேர் சாவு
தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 871 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து இன்று மட்டும் 3 லட்சத்து 35 ஆயிரத்து 939 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 04 ஆயிரத்து 333 ஆக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 13.39 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 164.04 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 74 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.