May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,634 பேருக்கு கொரோனா; 17 பேர் சாவு

1 min read

Corona for 1,634 people in Tamil Nadu today; 17 people were killed

14.2.2022
தமிழகத்தில் இன்று 1,634பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர். 7,365 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 2,296 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 1,634 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் 95,750 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,634 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,37,896 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,383 பேர் ஆண்கள், 913 பேர் பெண்கள்.
இன்று 7,365 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,64,013 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 17 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,932 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 461 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 14 ம் தேதி) 341ஆக குறைந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.