May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா; 4 பேர் சாவு

1 min read

Corona for 618 people in Tamil Nadu today; 4 deaths

23.2.2022
தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளார். 2,153 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (பிப்ரவரி 22 ம் தேதி) 671பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 23 ம் தேதி) பாதிப்பு 618ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 63,267 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 617 பேர் மற்றும் ஓமன் நாட்டில் இருந்து வந்த ஒருவர் என 618 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,47,006ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,40,86,016மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 352 பேர் ஆண்கள், 266 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 20,11,910 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,34,058 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,153 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,98,231 ஆக உயர்ந்துள்ளது.

4 பேர் சாவு

கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளார். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,993ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 169ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 23ம் தேதி) 156 ஆக குறைந்துள்ளது.

நெல்லை, தூதுக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா 6 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.