தென்காசி நகராட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் அண்ணன் தங்கை வெற்றி
1 min readBJP wins Tenkasi municipal polls Brother sister win on behalf
23.2.2022
தென்காசி நகராட்சி தேர்தலில் பா.ஜ.க.சார்பில் போட்டியிட்ட அண்ணன், தங்கை இருவர் வெற்றி பெற்றனர்.
அண்ணன்-தங்கை
தென்காசி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி வைத்தும், அதிமுக, பாஜக., தனித்தனியாகவும் வேட்பாளர்களை களம் இறக்கியது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட 8வது வார்டு பொன்னம்மாள், 14வார்டு சீதாலெட்சுமி, 15வது வார்டு சங்கரசுப்பிரமணியன், 23வது வார்டு சுனிதா, 30வது வார்டு லெட்சுமணப் பெருமாள் ஆகிய 5 பேர் வெற்றி பெற்றனர்.
இவர்களில் சங்கரசுப்பிரமணியனும், சீதாலெட்சுமியும் அண்ணன், தங்கை.
இவ்விருவரின் வெற்றியையும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமல்லாது, அவர்கள் சார்ந்த பாஜக மட்டுமல்லாது பொதுமக்கள் பலர் கொண்டாடினர். நகராட்சியில் பாசமலர்கள் இருவரும் சிறப்பாக மக்கள் பணியாற்ற அவர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.