தமிழகத்தில் இன்று 575 பேருக்கு கொரோனா; 4 பேர் சாவு
1 min readCorona for 575 people in Tamil Nadu today; 4 deaths
24.2.2022
தமிழகத்தில் இன்று 575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளார். 1,913 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (பிப்ரவரி 23 ம் தேதி) 618 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 24 ம் தேதி) பாதிப்பு 575 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 65,988 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 575 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,47,581 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 327 பேர் ஆண்கள், 248 பேர் பெண்கள். தமிழகத்தில் 1,913 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,00,144 ஆக உயர்ந்துள்ளது.
4 பேர் சாவு
கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,997 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 156 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 24 ம் தேதி) 144 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 5 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.