May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா; 3 பேர் சாவு

1 min read

Corona for 507 people in Tamil Nadu today; 3 deaths

25.2.2022
தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளார். 1,794 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (பிப்ரவரி 24 ம் தேதி) 575 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 25 ம் தேதி) பாதிப்பு 507 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் 66,366 மாதிரிகள் தமிழகத்தில் கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 507 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,48,088 ஆக அதிகரித்து உள்ளது..
இன்று தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களில் 292 பேர் ஆண்கள், 215 பேர் பெண்கள். இன்று 1,794 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,01,938 ஆக உயர்ந்துள்ளது.

3 பேர் சாவு

கொரோனா பாதிப்பு காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2 பேரும், வேலூரில் ஒருவரும் இறந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,000 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 144 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 25 ம் தேதி) 133 ஆக குறைந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடியில் தலா 3 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.