தமிழகத்தில் இன்று 480 பேருக்கு கொரோனா;2 பேர் சாவு
1 min readCorona for 480 people in Tamil Nadu today; 2 deaths
25.2.2022
தமிழகத்தில் இன்று 480 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளார். 1,464 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (பிப்ரவரி 25 ம் தேதி) 507 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 26 ம் தேதி) பாதிப்பு 480 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 63,263 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,48,568 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 280 பேர் ஆண்கள், 200 பேர் பெண்கள். இன்று 1,464 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,03,402 ஆக உயர்ந்துள்ளது.
2 பேர் சாவு
கொரோனா பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,002 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 133 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 26 ம் தேதி) 126 ஆக குறைந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேரும், தென்காசியி் 2 பேரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.