தெலுங்கானா விமான விபத்தில் தமிழக பயிற்சி விமானி உட்பட இருவர் பலி
1 min readTwo killed in Telangana plane crash
26.1.2022
தெலுங்கானா விமான விபத்தில் தமிழக பயிற்சி விமானி உட்பட இருவர் பலியானார்கள்.
விபத்துக்குள்ளான விமானம் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமானது.
பிளைடெக் ஏவியேஷன் செஸ்னா 152 ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மச்செர்லாவில் இருந்து புறப்பட்டது. கிருஷ்ணா நதியின் நாகார்ஜுன்சாகர் அணைக்கு அருகில் உள்ள பெத்தவுராவின் துங்கதுர்த்தி கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பலத்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர், ஹெலிகாப்டர் சிதைந்த நிலையில் கிடந்ததுள்ளது.
இந்த விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மகிமா என்ற பயிற்சி விமானி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.