April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 366 பேருக்கு கொரோனா: ஒருவர் சாவு

1 min read

Corona for 366 people in Tamil Nadu today: one death

28.2.2022

தமிழகத்தில் இன்று 366 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 1,013 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (பிப். 27 ம் தேதி) 439பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்.28ம் தேதி) பாதிப்பு 366 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 55,994 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 366 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,49,373 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,43,98,334 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 209 பேர் ஆண்கள், 157 பேர் பெண்கள். இன்று 1,013 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,05,624 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று கோவை மாவட்டத்தில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,004 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 119 ஆக இருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 28 ம் தேதி) 96 ஆக குறைந்துள்ளது
நெல்லை, தென்காசியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை. தூத்துக்குடியில் இன்று 3 பேர் பாதிக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.