கோவா மாநிலத்தின் 14-வது முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்பு
1 min readPramod Sawant becomes 14th Chief Minister of Goa
28.3.2022
கோவா மாநிலத்தின் 14-வது முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
கோவா முதவர்
கோவாவின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 11, சுயேச்சைகள் 3, ஆம் ஆத்மி 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் 2, கோவா பார்வர்டு 1, புரட்சிகர கோன்ஸ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக் களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏவின் ஆதரவு தேவைப் பட்டது. இந்த சூழலில் 3 சுயேச் சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தற் போதைய முதல்வர் பிரமோத் சாவந்த், மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்த சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் 25 எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்தார்.
பதவி ஏற்பு
இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் அமைந்துள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் கோவா மாநிலத்தின் 14வது முதல்-மந்திரியாக இன்று பிரமோத் சாவந்த் பதவியேற்றார். தொடர்ந்து 2வது முறையாக கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.
பிரமோத் சாவந்துக்கு மாநில ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றனர்.