ஜார்கண்டில் பயங்கர ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகள் கைது
1 min read3 Naxalites arrested with terror weapons in Jharkhand
29.3.2022
ஜார்கண்டில் பயங்கர ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
நக்சலைட்டுகள்
ஜார்கண்ட் மாநிலம் காபியா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மத்திய பாதுபாப்பு படை போலீசாருடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து போலீசார் 2 துப்பாக்கிகள், குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள், மொபைல் போன்கள், பயங்கரவாதிகள் பயன்படுத்தும் உடைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்தனர். 3 பேரும் சதாரா மாவட்டத்தை சேர்ந்த முன்னிலால், ராகுல் கஞ்சு, மகேந்திரகஞ்சு என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல் உள்பட 45-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர்களுடன் இருந்த மற்ற நக்சலைட்டுகள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது