May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 1,225 பேருக்கு கொரோனா; 28 பேர் சாவு

1 min read

Corona for 1,225 newcomers in India; 28 killed

31/3/2022
இந்தியாவில் புதிதாக 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

இந்தியாவில் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,594 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 004 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 307 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

28 பேர் சாவு

இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 22 லட்சத்து 27 ஆயிரத்து 307 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 184 கோடி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தவலை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.