April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 49 people in Tamil Nadu today

30.4.222
தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 24 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 36 பேர் உள்பட 9 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 29 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.

அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மட்டுமே கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 11 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 44-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 43 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 347 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும் உள்பட 513 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.