June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தின் குற்றாலம் டூர்/ நகைச்சுவை கதை

1 min read

Courtallam Tour / Comedy Story of the Thousand Years

1.5.2022

கண்ணாயிரம் தனது நண்பருடன் கட்டிப்பிடித்து சண்டைபோட்டவரின் சட்டையை குரங்குவந்து கொடுத்தபோது அந்த சட்டையை வீட்டின் முன் கட்டிதொங்கவிட்டுவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். சட்டைக்கு சொந்தக்காரர் வந்து சட்டையை கேட்டபோது கண்ணாயிரம் வந்துபார்த்தபோது சட்டையை காணவில்லை.சட்டையை தராவிட்டால் கட்டிதொங்கவிட்டுவிடுவேன் என்று அவர் கண்ணாயிரத்தை மிரட்டினார். இதனால் கண்ணாயிரம் அழுதுகொண்டிருந்தபோது அவரது நண்பர் அங்கு வந்தார். என்ன கண்ணாயிரம் அழுற என்று அவர் கேட்க கண்ணாயிரம் கண்களை கசக்கியபடி அதுவந்து இவரு சட்டையை கட்டி உயர தொங்கவிட்டிருந்தேன்..அதை இப்ப காணல…என்றார்.
உடனே அவர்..என்ன கண்ணாயிரம் சட்டையை தொங்கவிட்ட இடத்தில பாத்த..அந்த இடத்துக்கு கீழேபாத்தியா என்று கேட்டார். கண்ணாயிரம் மெல்ல ஆமா…பாக்கல என்றவாறு கீழே பார்த்தபோது அங்கு சட்டை கிடந்தது. ஆமா..சட்டை கிடக்கு என்று கண்ணாயிரம் குதித்தார். ஆமா..எப்படி இங்கவந்துச்சு என்று கேட்டார். அதற்கு அவர் நண்பர்..ஏய்..நீ சட்டையை சரியாகட்டாமவிட்டிருக்க..அது காத்துல அவிழ்ந்து கீழேவிழுந்திருக்கு..அதை நீ சரியா பாக்கல..சரி…சரி..அந்த சட்டையை எடுத்து அவனிடம் கொடுத்து அனுப்பு என்று சொன்னார்.
கண்ணாயிரமும் உடனே அந்த சட்டையை எடுத்து அவர்கையில் கொடுக்க போனார்.உடனே அவர் சட்டையை என்கையிலே போட்டா நான்வாங்கமாட்டேன். சட்டையை என்கையிலே கொடுத்தாதான்வாங்குவேன் என்றார்.உடனே கண்ணாயிரத்தின் நண்பர் சிரித்தபடி…கண்ணாயிரம்..சட்டையை அவன் கையிலே கொடு..
என்றார்.
கண்ணாயிரமும் பணிவுடன் சட்டையை அவரிடம் கொடுத்தார்.அவர் சட்டையை வாங்கிக்கொண்டு …கண்ணாயிரம் நன்றி. சட்டையை என்கையில் போடாமல்.என்னிடம் கொடுத்தாய்.. எனக்கு மரியாதை தந்த உனக்கு வாழ்த்துக்கள் என்று கூறியபடி சென்றார்.கண்ணாயிரத்துக்கு ஒன்றும் புரியவில்லை.சட்டையை போடாமல் கொடுத்தாய் என்கிறாரு…அவன் சட்டையை நான் ஏன்போடப்போறன்…என்றார்.

கண்ணாயிரத்தின் நண்பர்..அவருக்கு விளக்கினார்.கண்ணாயிரத்துக்கு கொஞ்சம் புரிந்தது.துணியை கொடுக்கிறது வேற மேல இருந்து போடுறது வேறயா.. என்னமோ போங்க..என்றார். கொடுப்பது தானம்..போடுவது..வேறமாதிரி..என்று சொன்னார் அவரது நண்பர்…ம்.எனக்கு தலை சுத்துது..இந்த சட்டை பிரச்சினையை இனிவரக்கூடாது..எனக்கு போரடிக்குது.ஆளைவிடுங்க..என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடி கதவை பூட்டிக்கொண்டார்.


கண்ணாயிரம் நாம தொட்டா எல்லாம் பிரச்சனையா வருது..என்னசெய்யலாம் என்று யோசித்தபடி இருந்தார். கண்ணாயிரம் மனைவி ஏங்க.. ஏற்கனவே கால்வலிக்குதுன்னு சொன்னீங்க..பேசாம சாப்பிட்டுட்டு படுங்க..என்றார். கண்ணாயிரத்துக்கும் அது நல்லதாகவேபட்டது.அதுவும் சரிதான்..என்றபடி அமர்ந்திருந்தார்.பூங்கொடி சாப்பாடு கொண்டுவந்து கொடுத்தார். கண்ணாயிரம் சாப்பிட்டுவிட்டு…நாளைக்கு சிலம்பாட்டபயிற்சியை எப்படி மேற்கொள்ளுவது என்று சிந்தித்தார். நாளைய பிரச்சினை நாளைக்கு..இன்னைக்கே அதைபற்றி யோசிச்சு ஏன் நிம்மதியை இழப்பானேன் என்றபடி கொட்டாவிவிட்டார். படுத்தார்.கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து குறட்டை வந்தது.

பூங்கொடிவந்து பார்த்தார்.ம்…ஒரு நாள் சிலம்பாட்டத்திலே ஆளு ..களைப்பாயிட்டாரு..ம் தூங்கட்டும் என்றபடி அவரும் அருகில் உள்ள கட்டிலில் படுத்தார்.
விடிந்தது..சேவல் கூவியது.கண்ணாயிரம் மெல்ல எழுந்தார். பூங்கொடியும் எழுந்துவிட்டார். காலையிலே வெயில் சுள்ளென்று அடிக்க தொடங்கியது. என்ன வர வர வெயில் இப்படி அடிக்குது..கண்ணை துறக்க முடியல. .மணி காலை ஆறுதான் ஆச்சு..என்ன இப்படி வெயில் கொளுத்துது என்று பூங்கொடியிடம் கேட்டார்.
பூங்கொடி உடனே..ஏங்க..மணி இப்பம் ஏழு ஆச்சு என்றார்.கண்ணாயிரம் அதை ஏற்காமல்…என்ன நான் என்ன முட்டாளா..சுவர்கடிகாரம் ஆறுமணியைத்தான காட்டுது.நான் கணக்குல வீக்கு..கடிகாரம் எல்லாம் நல்லாபார்ப்பேன் தெரியுமா..என்றார். உடனே பூங்கொடி..நீங்க கணக்குல வீக்கு..கடிகாரத்துக்கு பேட்டரி வீக்கு..நேற்று சாயங்காலம் ஆறுமணியிலே இருந்து கடிகாரம் ஓடவில்லை என்று சொன்னார். கண்ணாயிரத்துக்கு பக்கென்றது.
இதுவேறயா..பேட்டரியெல்லாம் போட்டுவக்கிறது இல்லய்யா..காலம் பொன்போன்றது தெரியுமா..எட்டுமணியாச்சுன்னா சிலம்பாட்ட பயில்வான் வந்திருவாரு..நான் ரெடியாக வேண்டாமா..நான் இப்போ எவ்வளவு பிசி என்றபடி கண்ணாயிரம் குளிக்க போனார். பூங்கொடி வீட்டிலிருந்த ஒருபேட்டரி கட்டையை எடுத்து கடிகாரத்துக்கு போட்டுவிட்டு பழைய பேட்டரியை எடுத்து வெளியே வீசினார். தனது செல்போனில் டைம்பார்த்து கடிகாரத்தில் ஏழரைமணி என்றுவைத்தார்.
கண்ணாயிரம் குளியல் அறையில் இருந்தபடி பூங்கொடி இப்பம் மணி என்ன என்று கேட்டார். அதற்கு அவர் ஏழரை என்றார்.கண்ணாயிரம்..உடனே..என்ன மணியைத்தான சொன்ன…என்று கேட்டார். பூங்கொடி பதிலுக்கு ஆமா…ஆமா..என்றார்.
கண்ணாயிரம் குளித்துவிட்டு தலையை துடைத்தபடி வெளியே வந்தார்.ம்..இட்லி ரெடியாயிட்டா..சீக்கிரம்..சீக்கிரம்..என்று அவசரப்படுத்தினார். பூங்கொடி அவரிடம்..ம்..அவசரப்படுத்தாதிங்க..இட்லிவேகவேண்டாமா…பிறகு கல்லுமாதிரி இருக்கும்…சரியா என்றார். அதற்கு அவர்..ம்…இட்டிலி நல்லா வேகட்டும்..பிறகு வயிறுவலிக்கும்..என்று சொன்னார். ஐந்து நிமிடத்தில் பூங்கொடி சுடச்சுடச் இட்லி சாம்பார் என்றபடி வெளியே வந்தார்.
கண்ணாயிரம் சுவையாக சாப்பிட்டார். நாலு இட்லிக்கு மேல் கிடையாது என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் ம்..இன்னும் இட்லி வேண்டும் என்றார். பூங்கொடி அதெல்லாம் கிடையாது..சுகர் அதிகமாகிவிடும் என்று எச்சரித்தார்.கண்ணாயிரம்…ம்..அதுவும் சரிதான் என்றார். பயில்வான் பச்சமுட்டை சாப்பிடச்சொன்னார்..அதுவேற சாப்பிடல ..இன்னைக்கு வேற வெயிலு அதிகமா இருக்கு..என்ன செய்யுறதுன்னு தெரியல..என்று முணங்கினார். உடனே பூங்கொடி..ஏங்க..காலையிலே வெயில் அதிகமா இருக்கு அதனால இந்த சிலம்பு பயிற்சியை மாலையிலேவச்சிட்டா என்ன..வெயிலும் குறஞ்சுடும்..நல்லா இருக்கும் என்று சொல்ல கண்ணாயிரமும் தலையை ஆட்டினார்.

அந்த நேரத்தில் பயில்வான் சிலம்பம் சுற்றியபடி அங்குவந்தார். என்ன கண்ணாயிரம் பயிற்சிக்கு ரெடியா..என்று கேட்டார். உடனே..பூங்கொடி குறுக்கிட்டு பயில்வான் சார்..காலையிலே வெயில் அதிகமா இருக்கு.கண்ணாயிரம் இந்த வெயில தாங்கமாட்டாரு..அதனால மாலையிலே பயிற்சியைவச்சிக்கலாமே என்றார். அதற்கு அவர் ஓ.கே.அதுவும் நல்லதுதான். மாலையிலே வர்ரேன்.என்றார். கண்ணாயிரம் ம்..வெயிலு எனக்கு பிடிக்காது.கோடைவெயில எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல என்று புலம்பினார்.
அதற்கு பயில்வான்கவலைப்படாதீங்க..கண்ணாயிரம்..புது வையிலிருந்து குற்றாலத்துக்கு நாலுநாள் டூர் ரெடி பண்ணியிருக்கோம். பைசா கம்மிதான்..பலன் அதிகம். குற்றாலத்திலே நீங்க ஆசைதீர குளிக்கலாம். சூடு எல்லாம் குறஞ்சிடும் எப்படி என்று கேட்டார். குற்றாலம் என்றவுடன் கண்ணாயிரத்துக்கு மனசுக்குள் குளிர் அடித்தது. ஆ..நாலுநாள் நல்லா குளிக்கலாம்..சுத்தலாம்..டென்சன் குறையும்..குற்றாலம் போகலாம் என்றார்.பூங்கொடியும்…ம் குற்றலாமுன்னா யாருக்குத்தான் புடிக்காது. ஒரு நாலு நாளு அப்படியே போயிட்டுவருவோம் என்று சொல்ல கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.
ஆ..எப்போ குற்றாலம் போறம் என்று கேட்டார். நாளைக்கு மாலை ஆறு மணிக்கு இங்கே பஸ்நிலையத்திலிருந்து புறப்படும். என்னுடைய முட்டைக்கடையில பணத்தைகட்டி புக் பண்ணிக்குங்க என்றார். கண்ணாயிரத்துக்கு கையும் ஓடல காலும் ஓடல..ஆ..குற்றாலம்..ஆ.குற்றாலம் என்று குதிக்க தொடங்கினார். பூங்கொடியிடம்..பணத்தை கட்டிடு…நாம இரண்டு பேரும் போயிட்டுவர்ரோம் என்றார். பூங்கோடி அவரிடம்..ஏங்க அவசரப்படாதீங்க என் பிரண்டுகள் வாராங்களான்னு பாத்துக்கிடுறன் என்றார். உடனே கண்ணாயிரம் நானும் என் பிரண்டுகள் வாராங்களான்னு பார்க்கிறேன் என்று சொல்ல..பூங்கொடி சிரித்தார். உடனே..பயில்வான்..நீங்க எங்கேயும் போகவேண்டாம்..யார் எல்லாம் வாராங்கன்னு நானே சொல்லுறன்..என்றார்.அது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கண்ணாயிரம் கேட்க பயில்வானோ..டூர் ஏற்பாடு நான்தானே என்றபடி குற்றாலம் டூருக்கு வருபவர் பட்டியலை படித்தார்.கண்ணாயிரமும் பூங்கொடியும் அமைதியாக கேட்டார்கள். வருபவர்கள் பட்டியலில் துபாய்காரர்பெயர் இருந்தது. அதை கேட்டதும்..அவர் எதற்கு வருகிறார். அவர் காரில் போகவேண்டியதுதானே.. அவர்வந்தா அவர்நாயும்வருமே என்றார். அதற்கு பயில்வான் மெல்ல துபாய்காரருடன் அவரது நாய்வரவில்லை. ஆனா அவங்க மனைவிவருவாங்க..என்றார்.
கண்ணாயிரம்…அப்பாட நாய்வரவில்லை. அதுபோதும்..குற்றாலத்துக்கு நாங்க வருகிறோம் என்று கண்ணாயிரம் உறுதி கொடுத்தார். பூங்கொடியும்..பயில்வான்சார் எங்க அப்பாக்கிட்டவாங்கி பணம் தந்திடுறேன்..என்று சொன்னார்.

கண்ணாயிரம் மெல்ல ஏய் உங்க அப்பாக்கிட்ட பணம் கேட்காத..பிறகு அவரும் குற்றாலம் வர்ரேன்னு சொல்வாரு…அது சரிப்பட்டுவராது..போயிட்டு வந்திட்டு அவரிடம் பணம்வாங்கிக்க..இப்போ இருக்கிற பணத்தை கொடுத்து போவோம் என்றார். பூங்கொடியும் சரி என்றார்.
அப்போது பூங்கொடியின் தந்தை போன் செய்தார். பூங்கொடி எடுத்து பேசினார். எதிர்முனையில் அருவா அமாவாசை பேசினார். என்னம்மா நல்லா இருக்கியா…நாளைக்கு மாலை நான் உன் வீட்டுக்குவர்ரேன். ஒரு இரண்டு நாள் அங்கே தங்கிட்டுவர்ரேன். இங்கே வெயில் தாங்கமாட்டேங்குது. அங்கு வந்தா கோயில் குளமுன்னு சுத்திட்டுவருவேன்.என்ன நான் சொல்லுறது.நீயும் வாங்கப்பா…வாங்கப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்க..உனக்கு என்மேல் என்னபாசம்..என்ன நான் பேசுறன்..நீ பேசமாட்டேங்கிற..என்றார்.

பூங்கொடி தப்பிக்க..உங்க மாப்பிளை பேசணுமுன்னு ஆசைபடுறாரு..இன்னா பேசுங்க..என்று செல்போனை நீட்டினார்.கண்ணாயிரம்….ஆ..மாட்டேன் என்று நழுவபார்த்தார்.

வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.