கூர்ம அவதார நாளில் வழிபட்டால் மனத் தைரியம் பெறலாம்
1 min read
Worship on the day of the sharp incarnation can bring mental courage
வைகாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் ஏகாதசி திதி நாளை நிர்ஜல ஏகாதசி என்று அழைப்பர். அன்றைய தினம் ஒருதுளி தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்தால் ஒரு வருடம் ஏகாதசி விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும். பஞ்சபாண்டவர்களில் பீமன் இந்த விரதத்தை மேற்கொண்டார். அதனால் இதற்கு பீம ஏகாதசி என்றும் கூறுவார்கள்.
மறுநாள் துவாதசி திதியை பாண்டவ துவாதசி என்று அழைப்பார்கள். பாண்டவர்கள் முந்தைய நாள் நிர்ஜல ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு மறுநாள் மகாவிஷ்ணுவுக்கு நிவேத்தியம் படையல் வைத்து வணங்கினார்கள். இப்படி விரதம் இருந்ததால் அவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். எனவே இழந்த பொருளையோ பதவியையோ மீண்டும் பெற இந்த இரண்டு நாளும் வழிபாடு செய்தால் கைக்கூடும்.
மேலும் இந்த துவாதசி மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த திதி. இந்த துவாதசியை ராம&லட்சுமண துவாதசி என்றும் அழைப்பார்கள். அன்றைய தினம் லட்சுமணருடன் கூடிய ராமரை வழிபடுவது மிகவும் நல்லது. இதனால் அரசு வேலை கிடைக்கும். அரசு வகையில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இழந்த பொருட்களை மீண்டும் கிடைக்கப்பெறலாம்.
இந்த சிறப்புக்குரிய நாள் இந்த மாதம்(ஜூன்) 10 மற்றும் 11&ந் தேதிகளில் வருகிறது.
இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் 10&ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டை சுத்தப்படுத்தவேண்டும். குறிப்பாக பூஜை அறையை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீர்கூட அருந்தாமல் விரதத்தை மேற்கொண்டு விடவேண்டும். அன்று இரவு பெருமாளுக்கு பால் பாயாசம், அவல், பொரிகடலை மற்றும் பழங்கள், வெற்றிலைபாக்கு போன்றவற்றை படைத்து வணங்க வேண்டும். மேலும் ராமர்&லட்சுமணர் படத்தை வைத்தும் பூஜிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் துளசி தீர்த்தத்தை குடித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். மேலும் படைக்கப்பட்ட பொருட்களை அக்கம்பக்கத்தினருக்கு கொண்டு தாமும் உண்ணலாம். அன்று மாலை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வரவும்.