அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
1 min readAdjournment of case against AIADMK General Assembly to Monday
8/7/2022
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்படவேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, இன்றைக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டடார். வழக்கு விசாரணையை 8-ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்கள் வாதத்தை முன்வைத்தனர். “ஓ.பன்னீர்செல்வம் மனு விசாரணைக்கே உகந்தது அல்ல. கட்சி பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றத்தில் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். முன் அனுமதி இல்லாமல் ஓ.,பன்னீர் செல்வ்ம தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல” என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன்வைத்தது.
“பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக முன்வைத்த வாதம் தவறு, தலைவர்கள் உயிருடன் இல்லாதபோது தான் பதவி காலி என கருதமுடியும்” என்று ஒ.பன்னீர் செல்வம் தரப்பு வாதம் முன்வைத்தது.
“கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை. சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தாலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்டவேண்டும்” என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு
இந்நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்ட சென்னை ஐகோர்ட்டு, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தது.