அல்வாவுக்காக ரூட்டைமாற்றிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை
1 min read
Kannairam who changed root for Alva/ Story by Thabasukumar
18.7.2022
கண்ணாயிரம் காந்தாபிரியாணி சாப்பிட்டதால் வயிறு கடமுடா என்று உருட்டியதால் பண்ருட்டியில் சுற்றுலா பஸ்சிலிருந்து இறங்கி பாத்ரூம் போய்விட்டு வெகுநேரம் கழித்து பஸ்சுக்குவந்து சேர்ந்தார். அப்போது வெளியூர்போனால் கண்ட கழுதையையும் சாப்பிடக்கூடாது என்று கண்ணாயிரத்தை பயில்வான் எச்சரிக்க…கண்ணாயிரம் சாப்பிட்டது கழுதை பிரியாணி என்று வதந்தி பரவியது. இதனால் கோபம் அடைந்த கண்ணாயிரம் தான் சாப்பிட்டது சிக்கன் பிரியாணிதான்..அது கழுதைபிரியாணி இல்லை என்று வேகமாக சொல்லிவிட்டு சோடாவை குடிக்க அதைபார்த்த ஒருவர்..கண்ணாயிரம் கழுதை பிரியாணி சாப்பிட்டா..தாகம் அதிகமாக இருக்கும் என்று நக்கல் அடிக்க..கண்ணாயிரம் ஆத்திரத்தில் அவர்மீது பாய்ந்தார்.
அந்த நேரத்தில் பயில்வான் தலையிட்டு கண்ணாயிரத்தை சமாதானப்படுத்தி சீட்டில் அமரவைத்தார்..இதுமூலம் சகலமான பேருக்கு அறிவிப்பது என்னவென்றால்..கண்ணாயிரம் சாப்பிட்டது சிக்கன்பிரியாணிதான்..யாரும் அவரை கழுதைபிரியாணி சாப்பிட்டாருன்னு சொல்லக்கூடாதுன்னு பயில்வான் கோரிக்கை மனுவாசிக்க..அனைவரும் சிரிக்க…கண்ணாயிரமும் சேர்ந்து சிரித்தார்…
ஓ…கண்ணாயிரத்தை நல்லா கலாச்சுட்டோமுல்ல என்று எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க…அந்த இடமே கலகலப்பானது. கண்ணாயிரம் வெட்கத்தால் முகத்தை கையால் மூடிக்கொண்டு..போங்க..எல்லோரும் என்னை ஏளனமா பாக்கிறீங்க..ஒருநாள் நான் பெரிய ஆளா வருவேன்…அப்பம்பாருங்க..என்னை. ..அதுவரைக்கும் பொறுமையா இருப்பேன்..என்று வீரவசனம்பேச..எல்லோரும் வாயைபொத்திக்கொண்டு சிரித்தனர்.
கண்ணாயிரம் மீண்டும் கோபமாவதை அறிந்த..பயில்வான் பேச்சை மாற்றி கண்ணாயிரத்தை கலகலப்பாக்க முயன்றார். இங்கே பாரு..கண்ணாயிரம்..கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை…உன் அருமை அவங்களுக்கு தெரியாது..நீ..பெரிய ஆளு…உன்னை மிஞ்ச உலகத்திலே ஆளே கிடையாது..என்று ஐஸ்வைக்க கண்ணாயிரமோ…ஏன் மீண்டும் கழுதையை இழுக்கிறீங்க…சிங்கம் அறியுமா சிறப்பான கற்பூரவாசனை அப்படின்னு சொல்லவேண்டியதுதானே..என்று சொல்ல…அடே..இதும் நல்லாத்தான் இருக்கு என்று பயில்வான் பாராட்ட கண்ணாயிரம் வாயெல்லாம் பல் தெரிய சிரித்தார்.
அதைபார்த்த பயில்வான் உடனே கண்ணாயிரம்.. குற்றாலத்துக்கு புறப்பட்டுவரும்வழியிலே இப்படிவிதவிதமா..கற்பனை வருது…குற்றாலத்திலே குளிச்சா அவ்வளவுதான்…அருவியா கற்பனை கொட்டும் என்று சொல்ல கண்ணாயிரம் உற்சாகமாகி…அந்த குற்றாலத்தை பத்தி சொல்லுங்க…அப்பத்தானே இண்டரஸ்டா இருக்கும்..என்று சொன்னார் பயில்வானும்..குற்றாலத்தை பத்தி சொல்லணுமா…
குற்றாலம்..அது ஏழைகளின் ஊட்டி..எல்லோரும் குளிச்சி இன்பமா இருக்கலாம்..மனசும் குளிர்ச்சி அடையும்.உடலும் குளிச்சி அடையும்…தெரியுமா..
அங்கு குளிக்க ஓருநாள் போதாது…மூணு நாள் வேணும்..என்க..கண்ணாயிரமோ..ஏன் ஒருநாள் போதாதா..போனமா அருவியிலே குளிச்சமோன்னு வரமுடியாதா என்று கேட்க..பயில்வான் உடனே..அங்கு ஒரு அருவியா இருக்கு…ஏராளமா அருவி இருக்கு..ஒவ்வொரு அருவியிலும் குளிச்சிட்டுவரவேண்டாமா…ஏன்றார்.
கண்ணாயிரம் ஆர்வமாக ஓவ்வொரு அருவி பத்தியும் சொல்லுங்க…கேட்க நல்லாயிருக்கு என்று நிமிர்ந்துஉட்கார..பயில்வான் சொல்ல தொடங்கினார்..
னா பாரு..கண்ணாயிரம்…முதலில் நாம் பார்ப்பது மெயின் அருவி என்று பயில்வான் சொல்ல கண்ணாயிரமோ… என்ன நீங்க..பாதி இங்கிலீசு பாதி தமிழுமா சொல்லுறிங்க.. தமிழிலே .சொல்லுங்க என்று பிடிவாதம் பிடிக்க..பயில்வானோ…ஓ..அப்படியா..சுத்ததமிழில் சொல்லணுமா…அது முக்கிய அருவி…அதாவது பிரதான அருவி…போதுமா…அப்புறம் நாம பாக்கப்போவது ஐந்தருவி…என்று சொல்ல கண்ணாயிரம் குறுக்கிட்டு..என்ன தப்பு தப்பா சொல்லுறீங்க..முதலில் பிரதான அருவின்னு சொன்னீங்க…அடுத்து இரண்டாவது அருவின்னுதான சொல்லணும்..அதைவுட்டுப்புட்டு ஐந்தருவின்னு சொல்லுறீங்க.ஐந்தருவியை ஐந்தாவது சொல்லுங்க..அதுதானே நியாயம் என்று சொன்னார்.
பயில்வானும்…ம்..நீ அப்படிவர்ரியா…சரி..முதலில் பிரதான அருவி சொல்லிட்டேனா..அடுத்து தேனருவி…அதுக்கப்புறம் செண்பகாதேவி அருவி..அதுக்கடுத்து புலி அருவி…அதைத்தொடர்ந்து பழத்தோட்ட அருவி
என்று சொல்ல கண்ணாயிரம் உஷராகி..ஏங்க ஐந்தாவதாக ஐந்தருவி சொல்லாம…பழத்தோட்ட அருவின்னு சொல்லுறீங்க..என்று கலாய்க்க..பயில்வான் சிரித்துக்கொண்டு..நீ சரியா எண்ணுறியான்னு பார்த்தேன்…ஐந்தாவது ஐந்தருவின்னு வச்சிக்க…ஆறாவது பழத்தோட்ட அருவி ஏழாவது பழைய குற்றால அருவி…இப்படி அருவிகள் இருக்கு…நாம நல்லா குளிக்கலாம்..என்று சொன்னார்.
கண்ணாயிரம் முகத்தில் உற்சாகம் இல்லாதிருப்பதை பார்த்த பயில்வான்…என்னாச்சு கண்ணாயிரம்…அருவி பெயர் எல்லாம் சொல்லிட்டேன்ல என்க..கண்ணாயிரம்..அதான்..புலி அருவின்னு சோன்னீங்கல்லா..அதான் பயந்திட்டேன் என்க..பயில்வான் மெல்ல..அதா….புலி அருவின்னா..எப்பமும் அங்கே புலி இருக்காது…எப்பமாவது புலிவந்து தண்ணி குடிக்கும்…பகலில் நாம குளிக்கும்போது வராது..நைட்டிலேதான்…புலி வரும்…அதுக்குள்ளே நாம வந்திடலாம் என்று கண்ணாயிரத்தின் பயத்தை போக்கினார்.
கண்ணாயிரம் அடுத்து…இந்த தேனருவின்னு சொன்னீங்கல்ல…அது எப்படி தேனுல குளிக்கமுடியும்..தலைமுடியெல்லாம் வெள்ளையாகிடாதா என்று அப்பாவியாக கேட்க பயில்வான் சிரித்தபடி தேனருவின்னா..தேனா கொட்டாது..மலை உச்சியிலிருந்து வருவதால தேன் கலந்து வரும்…அந்த அருவி தண்ணி.. திருநெல்வேலி அல்வாமாதிரி தித்திப்பா இருக்கும் என்று சொன்னார். அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு நாக்கில் எச்சில் ஊற..நெல்லை அல்வா எங்கே கிடைக்கும் என்று கேட்க..பயில்வானோ எதேச்சையாக..நெல்லை அல்வா எல்லா இடத்திலேயும் கிடைக்கும்..ஆனா நெல்லை டவுனுல இருட்டுக்கடை அல்வா டேஸ்டே தனி..நைட்டிலேதான் வியாபாரம்..அரைமணி நேரத்திலே வித்திடும்..சீக்கிரமா வாங்கணும் என்று சொல்ல கண்ணாயிரத்துக்கு இருட்டுக்கடை அல்வா மீது ஆசை அதிகமாகியது..அந்த அல்வா சாப்பிடணுமுன்னு கண்ணாயிரம் சொல்ல நாம வேற ரூட்டிலே..ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியா அல்லா குற்றாலம் போறம் என்று சொல்ல கண்ணாயிரமோ..அல்வாவுக்காக ரூட்டை மாத்தச்சொல்லி அடம்பிடித்தார்.
பயில்வானும்…சரி..சரி..கண்ணை கசக்காதே…நெல்லை போயி தாமிரபரணி ஆற்றிலே குளித்துவிட்டு நெல்லையப்பர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு இருட்டுக்கடை அல்வா வாங்கி சாப்பிட்டுவிட்டு குற்றாலம் போலாம் என்றார்.
கண்ணாயிரம் மகிழ்ச்சி பொங்க சிரித்தபடி…அல்வா..அல்வா நெல்லை அல்வா என்று பாடியவாறு சீட்டில் கையால் தட்டி தாளம் போட்டார்.பஸ் பண்ருட்டியை தாண்டி நெய்வேலியை நோக்கிவிரைந்தது…கண்ணாயிரம்..மகிழ்ச்சியில் இருக்க பஸ்சின் குறுக்கே நாய் ஓட டிரைவர் பிரேக்போட…கண்ணாயிரம் பஸ்சில் உருள…பஸ்சில் கண்ணாயிரம் வைத்திருந்த வாட்டர்கேன் கீழே சாய்ந்து தண்ணீர் வழிந்து ஓட…எல்லோரும் கண்ணாயிரத்தை ஒருமாதிரி பார்த்தனர்.
ஏய்யா வந்தூச்சுன்னா..பஸ்சைவிட்டு இறங்கி போகவேண்டியதுதானே…இப்படி..பஸ்சிலே. ஹாய்..என்று முகத்தை சுளித்தார்.
கண்ணாயிரம் விவரம் புரிந்து ஏங்கே..கீழே வழிந்து ஓடுறது…என்று முடிப்பதற்குள்…மற்றொருவர்…அது மினரல்வாட்டருன்னு சமாளிக்கப்போற…நாங்க அதை நம்பமாட்டோம் என்க..கண்ணாயிரம் கோபத்தின் உச்சிக்கு சென்றார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.