கண்ணாயிரத்தை மிரட்டிய செல்போன்/நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
The cell phone that threatened Kannayiram/comedy story by Tabasukumar
9.8.2022
கண்ணாயிரம் குற்றாலம் சுற்றுலா சென்றபோது திருச்சியில் டிபன் சாப்பிடுவதற்காக பஸ் நின்ற வேளையில் அவர் தன்மனைவி பூங்கொடியுடன் அந்தபகுதியில் உள்ள ஓட்டலில் இரவு ஆப்பம் சாப்பிட்டார். பின்னர் பாத்ரூம் சென்றுவிட்டு இவர் திரும்பி வந்தபோது திடீரென்று மின்தடை ஏற்பட கண்ணாயிரம் தட்டுத்தடுமாறி இருட்டுக்குள் நடந்து பஸ்சை தேடிவந்தபோது சுடிதார்சுதா அவரதுகையைபிடித்து குலுக்க கண்ணாயிரம் பதறிப்போய் கையை உதற அந்த நேரத்தில் மின்சாரம் வர ஒரு வாலிபர் தன்போனில் இந்த காட்சியை படம்ஏடுத்தார். இது பூங்கொடிக்கு தெரியாது என்பதால் கண்ணாயிரம் சின்ன மகிழ்ச்சியில் பஸ்சில் ஏறியபோது படம் எடுத்த வாலிபர் செல்போனில் அந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்தார். இதைபார்த்து கோபம் அடைந்த கண்ணாயிரம் டேய் இது நியாயமாடா..என் பர்மிஷன் இல்லாமல் இப்படி படம் எடுக்கலாமாடா…அதை அழிச்சிடுடா என்று கெஞ்சினார்.
அதற்கு அந்த வாலிபர் ..நீங்க ரொம்ப மோசம்…அவசர குடுக்க…ஒரு நிதானமே கிடையாது என்று திட்ட…கண்ணாயிரத்துக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா..என்பர்மிசன் இல்லாம என்ன படம்எடுத்த…நான்தான் உன்னை திட்டணும்..நீ ஏண்டா என்ன திட்டுற..என்று கேட்டார்.
அதற்கு அந்த வாலிபர் அடபோங்க…நீங்க ரொம்ப மோசம்..நாங்க என்னவெல்லாம் பிளான் பண்ணி வச்சிருந்தோம்.. நீங்க சொதப்பிட்டிய என்று திட்ட கண்ணாயிரம் ஆத்திரத்தில் என்னடா பிளான் பண்ணி வச்சிருந்திய சொல்லுங்கடா…என்று கேட்க அந்த வாலிபர் அதெல்லாம் சொல்லமாட்டோம் என்று பிடிவாதம்பிடிக்க…கண்ணாயிரம் கெஞ்சலாக…ஏய் சிக்கலில் மாட்டி விட்டுடாதீங்கடா…சுடிதார் சுதாவுக்கும் எனக்கும் ஆகாதுடா சும்மா ஏதாவது கோர்த்துவிடாதீங்கடா..அதை அழிச்சிடுங்கடா ஏன்று சொல்ல அந்த வாவிபரோ ம்..மாட்டோம் மாட்டோம்..என்று சிரிக்க கண்ணாயிரம் அந்த வாலிபர் தலையில் ஓங்கி குட்டிவிட்டு தன் இருக்கையை நோக்கி ஓடினார்.
அந்த வாலிபர் வலிதாங்காமல் கண்ணாயிரத்தை விரட்டிக்கொண்டு ஓடிவர…பூங்கொடி…என்னங்க..பிரச்சினை அவன் உங்களை விரட்டுறான் என்று கேட்க…கண்ணாயிரம் அது ஒண்ணும் இல்லம்மா..ஓட்டலில என்ன சாப்பிட்டிங்கன்னு கேட்டான்…இடி ஆப்பம் கேட்டேன் ஆனா ஆப்பம்தான் தந்தாங்க ன்னு சொன்னேன்…அதுக்கு அவன் இடி தரலய்யா..இன்னாங்க இடின்னு இடின்னு இடிக்கிறான்.. அதனால அவன் தலையிலே குட்டிட்டு ஓடிவந்துட்டன் என்று சொல்ல..அந்த வாலிபரோ…இல்ல ஆன்டி இல்ல.. அவர் மாத்திசொல்லுறாரு என்று சொல்ல கண்ணாயிரம்.. அப்படில்லாம் ஓண்ணும் இல்லம்மா..உண்மையைத்தான் சொல்லுறேன் என்க…அந்த வாலிபரோ…இல்லை ஆன்டி..அந்த சுடிதார்சுதா இல்ல…சுடிதார்சுதா…அவுக..என்று இழுக்க கண்ணாயிரம் அந்த வாலிபரின் வாயைப்பொத்தி…ம் பேசாத என்க பூங்கொடியோ..ஏங்க..அந்த பயனவிடுங்க…நீ சொல்லு தம்பி என்றார்.
கண்ணாயிரமோ…வேண்டாம்…வேண்டாம்..அவன் பொய்பொய்யா சொல்லுவான்..இப்பம் வேணுமானாலும் பாரு என்று சொன்னார்.
அந்த வாலிபர் .பூங்கொடியை பார்த்து..ஆன்டி..நீங்க நல்ல ஆன்டி..நியாயமான ஆன்டி..அழகான ஆன்டி..அன்பான ஆன்டி..ஆனா உங்களுக்கு தெரியாம இருட்டிலே…இருட்டிலே..என்று இழுக்க…பூங்கொடியோ…இருட்டிலே என்னப்பா என்று கேட்க கண்ணாயிரம் சொல்லாத…சொல்லாத என்று அந்த வாலிபரிடம் செய்கையால் சொல்ல பூங்கொடி கண்ணாயிரத்தை அதட்டினார்.
ஏங்க..சும்மா இருங்க..நீங்க…தம்பி..நியாயமான தம்பி..நீ சொல்லு தம்பி என்று அந்த வாலிபருக்கு ஆதரவாக பேசினார்.
அந்த வாலிபர்..சரி ஆன்டி…உங்கள் நலனுக்காக சொல்லுறன்…இருட்டிலே..இருட்டிலே..கண்ணாயிரமும் சுடிதார்சுதாவும்..ம்..என்று இழுக்க சொல்லு தம்பி..பயப்படாத…சொல்லு…தைரியமா சொல்லு என்க அந்த வாலிபர்…அதுவந்து இருட்டிலே இருட்டிலே கண்ணாயிரமும் சுடிதார் சுதாவும் பேசிக்கிட்டு இருந்தாங்க…என்று சொல்லிவிட்டு வேகமாக முன்சீட்டை நோக்கி ஓடினார்.
கண்ணாயிரம் வேகமாக பொய்…பொய்…பொய்..என்று கத்த பூங்கொடியோ அதை நம்பாமல்..யோவ் எனக்கு தெரியுமய்யா உம்முடைய வண்டவாளம்..அதுக்குத்தான் ஓட்டலில் சாப்பிட்டவுடன் என்கூட வராம எங்கோயோ போயிட்டிங்களா…எங்கே போனிங்க சொல்லுங்க…எங்கே போனிங்க சொல்லுங்க என்று கண்ணாயிரம் சட்டையைபிடித்து உலுக்க..கண்ணாயிரம் ..அது வந்து பாத்ரூமுக்கு போனேன் என்று சொன்னார்.
அதற்கு பூங்கொடி..ஏங்க சாப்பிடுறதுக்கு முன்னாடிதான பாத்ரூமுக்கு போனிய..மறுபடி சாப்பிட்டபிறகு பாத்ரூமுக்கு ஏன்போனிங்க என்று கிடுக்குபிடிபோட கண்ணாயிரம் மெல்ல..காசு கிடையாதுல்லா பிரிதானே என்று ஓட்டலில் சாப்பிட்டபிறகும் பாத்ரூம் போயிட்டுவந்தேன்..மற்றபடி இதில மறைக்கிறதுக்கு ஒன்னும் கிடையாது என்றார்.
ஆனால் பூங்கொடி விடவில்லை.சரி..பாத்ரூம் போனிங்க..போயிட்டு உடனை பஸ்சுக்கு வரவேண்டியதுதானே..ஏன்வரல்லை..பாத்ரூமுக்கு போயிட்டு அப்புறம் எங்கே போனிங்க சொல்லுங்க என்று சொல்ல கண்ணாயிரம் பதில் சொல்லாமல்..அப்புறம்…அப்புறம் என்று இழுக்க.பூங்கொடி…ம்…சொல்லுங்க…என்றார்.
கண்ணாயிரம் எச்சிலைவிழுங்கியபடி நான் பாத்ரூமிலே இருந்து பஸ்சை நோக்கி நடந்துவந்தேனா.. மெல்ல மெல் நடந்துவந்தேனா.நடந்து வந்தப்போ…..நடந்து வந்தப்போ…திடீரென்று கரண்டு கட்டாயிட்டு..எங்கும் ஓரே இருட்டு.அப்புறம் என்னநடந்துச்சுன்னு எனக்கே ஒண்ணும் தெரியாது…என்று சொல்ல செல்போனில் படம் எடுத்த: வாலிபர் செல்போனை தூக்கிக்காட்ட அதைபார்த்த பூங்கொடி..அந்தபபன் ஏன் செல்போனை காட்டுறான் என்று கேட்க..கண்ணாயிரம் உடனே..அதுவா அவன் படம் எடுக்கிற செல்போன் வச்சிருக்கான்..அது வேணுமான்னு கேட்டான்.நான் வேண்டாமுன்னுட்டேன்..அது எதுக்கு நமக்கு அதான் வேண்டாமுன்னு சொன்னேன்…கேட்கமாட்டேங்கிறான்..மறுபடியும் மறுபடியும் கேட்டு டார்ச்சர் பண்ணுறான்.
விலை குறைச்சி தர்ரேங்கிறான்.நான்தான் வேண்டாமுன்னு சொல்லிட்டேன் என்று சமாளித்தார்.
பூங்கொடி உடனே ஏங்க விலை குறைச்சிதந்தாவாங்க வேண்டியதுதானே…நீங்களும் சாதாரண போன்தான வச்சிருக்கீங்க…அந்த போனை வாங்குங்க..என்க கண்ணாயிரம் பதறிப்போய்…நம்மக்கிட்ட எங்கே காசு இருக்கு..அந்த போனை வாங்க..படம் எடுக்கிறதுக்கு நீதான் நல்ல போன்வச்சிருக்கியே…பிறகு எதுக்கு இன்னொரூ போன்..என்று சொல்ல பைசா பத்தி கவலைப்படாதீங்க…எங்க அப்பாக்கிட்டவாங்கித்தர்ரேன்..சீப்பாகிடைச்சா வாங்கிக்கிக்கணும் விட்டுவிடக்கூடாது என்று சொல்ல கண்ணாயிரம். அந்த போன் வேண்டாம்..அவன் உடனே காசு கேட்பான்..நாம கொடுக்கமுடியாது என்று கண்ணாயிரம் சொல்ல…பூங்கொடியோ..உங்களுக்கு விவரம் பத்தாது..நான் அந்த தம்பிக்கிட்டபேசி போனைவாங்கித்தர்ரேன் என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம்.பதறிப்போய்..இது என்னவம்பா போச்சு..போனைவாங்கினா..அதில் சுடிதார்சுதா கைகுலுக்கினதை பூங்கொடிபாத்துடுவாள…நமக்கு சிக்கலாகிப்போகுமே என்று நினைத்து..எனக்கு அந்த போன் வேண்டாம் என்று கண்ணாயிரம் சொல்ல பூங்கொடியோ.எதுக்கும் அந்த தம்பிக்கிட்ட பேசிப்பார்ப்போம் என்க கண்ணாயிரம் ஒருமாதிரிஆகிவிட்டார்.
பூங்கொடி செல்போன்வைத்திருந்த வாலிபரை பார்த்து தம்பி. இங்கேவா…என்று அழைத்தார்.
அவன் ஓடிவந்து என்ன ஆன்டி..சொல்லுங்க என்க பூங்கொடி அவனிடம் அந்த செல்போனை கொடுங்க என்று கேட்டார். அவன் எதற்கு..செல்போன் கேட்கிறீங்க என்று கேட்க பூங்கொடி..அது நீவிக்கணுமுன்னு சொன்னியாமே..அதான் வாங்கலாமுன்னு நினைக்கிறேன்..என்னவிலை என்று கேட்டார்.
அதை கேட்ட அந்த வாலிபர்…நான் செல்போனை விக்கிறதா யாருக்கிட்டேயும் சொல்லவில்லையே…உங்களுக்கு யாரு சொன்னா என்று கேட்டான்.
பூங்கொடி மெல்ல கண்ணாயிரத்தை பார்க்க..கண்ணாயிரமோ மெல்ல…எங்கிட்ட அப்படித்தான் சொன்னான்..என்க..பூங்கொடி அந்த வாலிபரை பார்க்க..அந்த வாலிபரோ….பொய் சொல்லுறாரு ஆன்டி..இவர் சுடிதார்சுதாக்கிட்ட பேசிக்கிட்டு இருந்ததை நான் பார்த்துட்டேன்ல…அதனால..குழம்பிபோயி என்னவெல்லாமோ சொல்லுறாரு…என்றான்.
உடனே பூங்கொடி அந்த வாலிபரை பார்த்து நீ போ…நான் அவரை பாத்துக்கிறேன்..என்றபடி கண்ணாயிரத்தை பார்த்து..ஏன் இந்த பொய்யி..என்று கேட்க..கண்ணாயிரமோ சும்மா..என்று அசடுவழிந்தார்.
பூங்கொடிவிடவில்லை.சுடிதார்சுதாவிடம் இருட்டில் என்ன பேசினீர்கள்?…சொல்லுங்க என்க…கண்ணாயிரம்..அது இருட்டு..பேசினது குரலைவச்சி பொண்ணுன்னு தெரிஞ்சிக்கிட்டு..யாருங்க ..யாருங்க என்று கேட்டேன். பதிலே சொல்லலையே…பிறகு எப்படி இருட்டிலே பேசின ஆளை பத்தி தெரியும்..கரண்டுவந்தப்ப..அங்கே தூரத்திலே சுடிதார்சுதா நின்னுச்சு..நான் பாக்காதமாதிரி வந்துட்டேன். நமக்கு அவா எதிரில்லா என்று அடுக்கினார்.
உடனே பூங்கொடி..அப்போ ஏன் பூங்கொடிக்கிட்ட நீங்க பேசினிங்கன்னு ஏன் அந்தபய சொல்லுறான்…என்று கேட்க..இருட்டிலே ஆள்தெரியாம உளறுறான்…உளறுவாயன் ..அவன் சொல்லுறதை நம்பாதே..என்று சொல்ல சுடிதார் சுதா பஸ்சில் ஏறி உள்ளே வந்தார். அவளைப்பார்த்த பூங்கொடி..ம்..அவளே வர்ரா..இருட்டிலே அவக்கிட்டபேசினது யாருன்னு அவக்கிட்டேயே கேட்டுருவம் என்றபடி கண்ணாயிரத்தை பார்த்தார்.கண்ணாயிரத்தின் நெஞ்சு படக்படக்கென்று அடிக்க ஆரம்பித்தது.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை