மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் அதிக கோபம்
1 min readமன ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் அதிக கோபம்
பலர் சிறிய விஷயங்களுக்கு கூட கோபப்படுவார்கள். கோபம் என்பது ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்.
ஆனால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
குழந்தைகள் முதல் முதியவர்களுக்கு வரை, இது ஒரு பிரச்சனையாக மாறும். கோபம் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால், கோபம் கொண்டவர்கள் பெரும்பாலும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.
கோபம் அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்பது இதுவரை பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
அதிக கோபம் வந்தால் உடனே இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இது எப்படி ஆரோக்கியத்திற்கு எதிரியாக செயல்படுகிறது. எந்தெந்த வழிகளில் கட்டுப்படுத்தலாம் என்பதை காணலாம்
அதிகப்படியான கோபத்தால் வரும் பாதிப்புகள் :
வெப் எம்டியின் அறிக்கையின்படி, ஒருவர் அதிகமாக கோபப்படுவதை வழக்கமாக்கினால், பல வகையான நோய்கள் வரலாம்.
குறிப்பாக மன ஆரோக்கியத்தில் கோபம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, கவலை மற்றும் மனச்சோர்வு ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.
ஒருவரின் மனநலம் மோசமடையும் போது, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மோசமடைகிறது. அதன் விளைவு நீண்ட காலமாக பிரதிபளிக்கிறது.
அதோடு கோபம் உடல் ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது. கோபம் இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் தோல் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. கோபம் வந்த சிறிது நேரத்தில் தலைவலி, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.