இந்தியாவில் புதிதாக 9,520 பேருக்கு கொரோனா
1 min read9,520 new corona cases in India
27.8.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. ஒரு நாளில் புதிதாக 9 ஆயிரத்து 520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 520 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை பாதிப்பான 10 ஆயிரத்து 256 ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 98 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 87 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
41 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 211 கோடியே 39 லட்சத்து 81 ஆயிரத்து 444 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.