இடுக்கியில் நிலச்சரிவு: வீட்டு மண்ணில் புதைந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
1 min readLandslide in Idukki: 5 members of the same family were killed when they were buried in the house soil
29.8.2022
இடுக்கி அருகே திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிலச்சரிவு
கேரளாவில் தற்போது பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையோர மாவட்டங்களில் கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில், இடுக்கி மாவட்டம், தொடு புழாவை அடுத்த காஞ்ஞாரில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக சிற்றடிச்சால் என்ற இடத்தை சேர்ந்த சோமன் என்பவரது வீடு மண்ணுக்கு அடியில் புதைந்து சிதையுண்டது. இந்த நிலையில் வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்த சோமன் (வயது 53), அவரது மனைவி ஷிஜி (50), மகள் ஷிமா (25), ஷிமாவின் மகன் தேவானந்த் (4) சோமனின் தாயார் தங்கம்மா (70) ஆகிய 5 பேரும் மண்ணில் புதையுண்டு பலியானார்கள். நிலச்சரிவில் வீடு புதையுண்ட சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய குழு நவீன இயந்திரங்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணி தொடங்கியது.