இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5,591 பேராக குறைந்தது
1 min readDaily corona cases in India reduced to 5,591
29.8.2022
இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 9 ஆயிரத்து 436-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 15 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 2 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 84 ஆயிரத்து 931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
45 பேர் பலி
கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரைகடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 211 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 738 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.