August 26, 2026

Seithi Saral

Tamil News Channel

இளையராஜா அணிந்துரை எழுதிய புத்தகம் டெல்லியில் வெளியீடு

1 min read

A book written by Ilaiyaraaja Uvikarai is published in Delhi

16.9.2022

டெல்லியில் ‛அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். இந்த புத்தகத்திற்குத்தனர் இளையராஜா அணிந்துரை எழுதியிருந்தார்.

அம்பேத்கரும் மோடியும்

‘புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் சார்பில், ‘அம்பேத்கரும் மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான இளையராஜா அணிந்துரை எழுதியிருந்தார்.
புத்தகத்தில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு, இந்தியா குறித்த அவரின் தொலைநோக்குப் பார்வையை விவரிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை திறம்பட அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்ட பிரதமா் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

ராமநாத்கோவிந்த் வெளியிட்டார்

இந்த புத்தகத்தை டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *