May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 3,805 பேருக்கு கொரோனா

1 min read

3,805 new corona cases in India

1.9.2022
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 3,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கொரோனா

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நாட்டில் புதிதாக 3,805 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,24,164 ஆக உள்ளது. கொரோனாவுக்கு புதிதாக 26 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,655ஆக உயர்ந்தது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,24,164-ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 38,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.