May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 3,375 பேருக்கு கொரோனா

1 min read

3,375 new cases of corona in India

2.10.2022
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 3,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைகிறது. இன்று புதிதாக 3,375 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 3,805 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது.
இந்தநிலையில் இன்று புதிதாக 3,375 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை தாண்டியுள்ளது.

18 பேர் பலி

இதேபோல் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 18 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,673-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது வரை 37,444 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 219 கோடியை நெருங்கியுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் காலை வெளியிட்ட புள்ளி விவரங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.