ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி பலி
1 min readA terrorist was killed in an encounter with security forces in Jammu and Kashmir
2/9/2022
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
பயங்கரவாதி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பாஸ்குச்சான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி நசீர் அகமது பட் என அடையாளம் தெரிய வந்தது. பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவன் என தெரிய வந்தது. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதி பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட நபர் என்பதும், சமீபத்தில் ஒரு என்கவுண்டரில் இருந்து தப்பினார் என்றும் போலீசார் தெரிவித்தனர். முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று பாரமுல்லா பகுதியில் நடந்த என்கவுன்டரில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடைய இரண்டு உள்ளூர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.