இந்தியாவில் புதிதாக 734 பேருக்கு கொரோனா
1 min read734 new cases of corona in India
13.11.2022
இந்தியாவில் ஒருநாளிலர் 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 734 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,66,377 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,307- ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,23,539-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30, 531 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் இதுவரை 219.80 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் காலை வெளியிட்டது.