May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

திருமணம் முடிந்தவுடன் மனைவியை விற்ற வாலிபர் கைது

1 min read

Husband arrested for selling his wife to another man after marriage in delhi

13.11.2022
திருமணம் நடந்தவுடன் வேலை தேடி டெல்லி செல்வதாக மனைவியை அழைத்து சென்று வேறு ஒரு நபருக்கு விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

திருமணம்

ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியை சேர்ந்த கிரா பெருக் (வயது 25) என்பவர் சில தினங்களுக்கு முன் பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்தவுடன் வேலை தேடி டெல்லி செல்வதாக மனைவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வேறு ஒரு நபருக்கு கீரா பெருக் பூர்ணிமாவை கட்டிய மனைவி என்று கூட பார்க்காமல் பணத்திற்காக விற்றுள்ளார்.
அவரிடம் இருந்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். நவம்பர் 5 ஆம் தேதி பூர்ணிமா தனது தந்தை குலமணி போய்க்கு போன் செய்து நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க கூறினார். உடனடியாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கீரா பெருக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விற்கப்பட்ட பெண் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உண்மை சம்பவம் அம்பலமாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.