தாயுடன் சேர்ந்து தந்தையை துண்டுதுண்டாக வெட்டி கூறுபோட்டது ஏன்?-மகன் பரபரப்பு பேட்டி
1 min readWhy did you cut your father into pieces along with your mother?-son said in an interview
29.11.2022
டெல்லியில் தாயுடன் சேர்ந்து தந்தையை துண்டுதுண்டாக வெட்டி கூறுபோட்டது ஏன்? என்பது குறித்து மகன் கூறியுள்ளார்.
ஷ்ரத்தா
டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா தனது காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொடூரமாக கொல்லப்பட்டு, அவரது உடல் 35 துண்டுகளாக பிரிட்ஜில் பாதுகாத்து வைத்து, பல்வேறு பகுதிகளில் வீசி சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதேபோல் மற்றொரு பயங்கர சம்பவம் நடந்திருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் போலீசாருக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
லிப்ட் ஆபரேட்டர்
கிழக்கு டெல்லியில் உள்ள பாண்டவநகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ் (வயது 45). இவர் பீகாரை சேர்ந்தவர். டெல்லியில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பூனம் (48). இவர்களுக்கு தீபக் (25) என்ற ஒரு மகன் உள்ளார். தீபக்கிற்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர்.
அஞ்சன்தாஸ் தனது மருமகளை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனை பூனமும், தீபக்கும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்கவில்லை.
இதுதவிர அஞ்சன்தாசுக்கு பீகாரில் ஏற்கனவே மனைவியும், 8 மகன்களும் உள்ளனர். முதல் திருமணத்தை மறைத்து பூனத்தை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். பூனத்தின் தங்கநகையை விற்று அதில் கிடைத்த பணத்தை பீகார் குடும்பத்துக்கு அஞ்சன்தாஸ் அனுப்பியுள்ளார். மேலும் தீபக்கனின் மனைவியையும் விவகாரத்து பெற்ற 22 வயது மகளையும் ஒருமுறை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார் ஏற்கனவே அஞ்சன்தாஸ் மீது கோபத்தில் இருந்த பூனத்திற்கும், தீபக்கிற்கும் இது மேலும் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.
தூக்க மாத்திரை
எனவே அவரை தீர்த்துக்கட்ட அவர்கள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதமே திட்டமிட்டனர். அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையே கடந்த மே மாதம் அஞ்சன்தாசுக்கு மதுவில் அதிக தூக்க மாத்திரைகளை கலந்து பூனம் கொடுத்தார். இதனை குடித்த அவர் மயங்கினார். பின்னர் கத்தியை எடுத்து மனைவி பூனமும், மகன் தீபக்கும் சேர்ந்து அஞ்சன்தாசின் கழுத்தை ஆட்டை அறுப்பதை போல அறுத்தனர். உடலில் இருந்து ரத்தம் வடியும்வரை உடலை ஒரு நாள் முழுவதும் அப்படியே போட்டனர்.
கணவர் இறந்த பிறகும் ஆத்திரம் தீராத தாயும், மகனும் உடலை 22 துண்டுகளாக கூறு போட்டனர். பின்னர் அவற்றை பாலித்தீன் பைகளில் அடைத்து பிரிட்ஜில் வைத்தனர். அதன்பின்னர் ஒவ்வொரு உடல் பாகங்களாக எடுத்து வந்து தினமும் தலைநகர் டெல்லி முழுவதும் வீசி எறிந்தனர்.
இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்ட தீபக், போலீஸ் விசாரணையின் போது கூறியதாவது:-
பல திருமணங்கள்
எனது தாயாருக்கு 3 திருமணங்கள் நடந்து உள்ளன. கடைசியாக அவர் அஞ்சன் தாஸ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். அஞ்சன் தாசுக்கு முன், என் அம்மா கல்லு என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். அவர் தான் என் தந்தை. அஞ்சனுக்கும் நான்கைந்து திருமணங்கள் நடந்து உள்ளன. இது தவிர பல பெண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தார்.
வீட்டில் உள்ள என் மனைவி மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் எனது தாயாருக்கு தகவல் தெரிவித்து அஞ்சன் தாசுக்கு போதை மருந்து கொடுத்தேன். குடிபோதையில் என் தந்தையை கொன்றேன். கொலைக்குப் பிறகு உடலை வீட்டை விட்டு வெளியே எடுத்து அப்புறப்படுத்த முடியவில்லை. எனவே, எனது தாயின் உதவியுடன், நான் இறந்த உடலை சிறு துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீபக்கின் மனைவி, தாஸ் தன்னை எப்படித் துன்புறுத்துவார் என்றும், தொடர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றார் என்றும் கூறினார் அவர் கூறும் போது அவர் தீபக்கை குடிக்க வைத்து எனக்கு பலமாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்தார் என கூறினார்.