மத்திய அரசு துறைகளில் காலியாகவுள்ள பல்நோக்கு பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க 17-ந்தேதி கடைசி நாள்
1 min read17th is the last date to apply for the vacancies of multi-purpose employees in central government departments
3/2/2023
மத்திய அரசு துறைகளில் காலியாகவுள்ள
பல்நோக்கு பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க 17-ந்தேதி கடைசி நாள்.
பல்நோக்கு பணியாளர்
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்நோக்கு பணியாளர்கள் (தொழில்நுட்பம் அற்றது) 10 ஆயிரத்து 880 பேரும், அவில்தார் இன் சி.பி.ஐ.சி. அண்ட் சி.பி.என். 529 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி. எம்.டி.எஸ். போட்டி தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக இளைஞர்கள் மத்திய அரசு பணியில் சேர இது அரிய வாய்ப்பாகும். 10-ம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்ட வேலை நாடுநர்கள் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்.
17ந் தேதி
இந்த தேர்விற்கு விண்ணப் பிக்க வருகிற 17-ந்தேதி (வெள் ளிக்கிழமை) கடைசி நாளாகும். எஸ்.டி. பிரிவினர்களுக்கு 5 ஆண்களும், ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிபொது பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி எஸ். சி.,எஸ்.டி. பிரிவினர்களுக்கு 15 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகளும் உண்டு மற்றும் விதவைகள் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்விற்குபெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம். மற்றவர்கள் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் விவரங்கள் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.