கிரிப்டோ கரன்சி கட்டுப்பாடுகள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை- நிர்மலாசீதாராமன் தகவல்
1 min readAdvice on Bringing Crypto Currency Regulations – Nirmala Seetharam Information
26.2.2023
கிரிப்டோ கரன்சிக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை
கிரிப்டோ கரன்சிக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவருவது தொடர்பாக, இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரிப்டோ கரன்சி குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், கூட்டமைப்பு கிரிப்டோ குறித்து விரிவான விவாதம் மேற்கொள்ளும் என்றார். கிரிப்டோ போன்ற மெய்நிகர் சொத்துக்களில் மறைந்துள்ள அபாயங்களை உணர்ந்துள்ள ஜி20 நாடுகள், அதற்கு விரிவான கொள்கையை உருவாக்க விரும்புவதாகவும் கூறினார்.