May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

1 min read

Public grievance redressal camp organized by Tenkasi District Police

9.4.2023
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடப்பிரச்சனை, பணப்பிரச்சனை, குடும்ப பிரச்சினை போன்ற பல பிரச்சனைகள் நிலுவையில் இருந்து வந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில் மாபெரும் குறை தீர்க்கும் முகாம் அனைத்து காவல் நிலையம், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது,

இதில் ஒரே நாளில் 243 புகார்கள் பெறப்பட்டு அதில் 189 புகார்களுக்கு விசாரித்து தீர்வளிக்கப்பட்டது,
மீதமுள்ள 54 புகார்கள் விசாரிக்கப் பட்டு வருகிறது. ஒரே நாளில் காவல்துறையினர் 189 புகார்களுக்கு தீர்வளித்தது பயனடைந்த பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமினை நடத்தி அதில் 189 மக்களுக்கு உடனடி தீர்வு கண்டுள்ள தென்காசி மாவட்ட காவல்துறையினர் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜான்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.