மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது- தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்
1 min readManimegalai Award for Women Self Help Groups- Tenkasi District Collector Information
9.3.2023
தென்காசி மாவட்டத்தில் 2022 -2023-ம் நிதியாண்டு சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப் படுகிறது என மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மணிமேகலை விருது
தமிழகத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் 2022 -2023-ம் நிதியாண்டு சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுய உதவிக்குழுக்கள் சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரகம் ஃ நகர்புற வாழ்வாதார இயக்க அலகில் 10.04.2023 முதல் 21.04.2023-க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
-முத்துசாமி, தென்காசி நிருபர்