May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர்கள் 2 பேர் சாவு

1 min read

2 Spectators killed in Manjuvirat cow stampede

27.4.2023
மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர்கள் 2 பேர் இறந்தனர்.

மஞ்சுவிரட்டி

சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதில், காரைக்குடியை சேர்ந்த பாண்டி (32) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மங்களாம்பட்டியை சேர்ந்த முருகன் (55) என்பவரும் மாடு முட்டி உயிரிழந்துள்ளார். மேலும், மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ரூ.3 லட்சம் நிதியுதவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூர் சரகம், சீமானூர் கிராமத்தில் 23-4-2023 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த ஜெயந்த், த/பெ ஆறுமுகம் (வயது 21) என்கின்ற மாடுபிடி வீரர், மாடு முட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அதில் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.