June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

1 min read

Paying respects to Vanchinathan statue at Red Fort

18.7.2023
கலெக்டர் ரவிச்சந்திரன் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வாஞ்சிநாதன் பிறந்தநாள்

செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வாஞ்சிநாதனின் 137-வது பிறந்த தினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் வாஞ்சிநாதனின் தம்பி கோபாலகிருஷணன் பேரன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன், மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, தாசில்தார் முருகுசெல்வி, முன்னாள் நகர்மன்ற தலைவா் எஸ்எம். ரஹீம், நகர்மன்ற உறுப்பினா்கள் முருகையா, மேரி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் குட்டிராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *