June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

மருந்து இறக்குமதிக்காக இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்

1 min read

Sri Lanka signs agreement with India for import of medicines

4.10.2023
இலங்கை கடந்த ஆண்டு மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
மருந்து தட்டுப்பாடு மற்றும் காலாவதியான ஊசி மருந்துகளால் ஆஸ்பத்திரிகளில் அதிக மரணங்கள் நடந்தன. இதை தொடர்ந்து இலங்கை சுகாதாரத் துறை அவசரகால கொள்முதலுக்கு உத்தரவிட்டது. இது பெரிய அளவிலான ஊழல்களுக்கு வழிவகுத்தது, இது தரமற்ற மருந்துகளை சரியான தர சோதனைகள் இல்லாமல் நுழைய அனுமதித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ஒப்பந்தம்

இதை தொடர்ந்து ஊழலைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் அவசரகால மருந்துக் கொள்முதலை நிறுத்துவதோடு, இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் அரசுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என இலங்கை சுகாதாரத்துறை மந்திரி கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *