June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடர் கொள்ளை

1 min read

Serial robbery in Nellai, Tenkasi, Tuticorin

5.10.2023
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 இடங்களில் பெரிய அளவிலான கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

கடந்த 2-ந் தேதி பாளையங்கோட்டை மகாராஜநகரை சேர்ந்த அரசு அதிகாரி முருகப்பெருமாள் என்பவர் வீட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி இளங்கோ தெருவை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான கற்பக வள்ளி என்பவரது வீட்டு கதவின் பூட்டை உடைந்து அங்குள்ள பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் உண்டியல்களையும் எடுத்து சென்றனர்.
இதேபோல் நேற்று முன் தினம் இரவு தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை அன்னை தெரசா நகரை சேர்ந்த அற்புதராஜ் என்பவரது வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த மாமியார்- மருமகளை கட்டிப்போட்டு 62 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடையநல்லூர் அருகே சேர்ந்த மரம் பகுதியில் என்ஜினீயர் திருமலை நாதன் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

எனவே போலீசார் விரைந்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *